மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு மிஞ்சிய மருந்து என்றுமில்லை

190 0

சென்னை:

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழியை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகள் அதில் உண்டு.

நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியைதான், சுக்கு என்று சொல்கிறோம்.. இது எளிதில் கெடாத உணவுப்பொருள்.. சமையலுக்கும், மருத்துவத்துக்கும், பயன்படக்கூடியது.

செரிமானம்:

செரிமானத்துக்கு, இஞ்சியை விட சுக்கு மிகவும் நல்லது.. அஜீரண கோளாறு இருப்பவர்கள், சுக்கு + துளசி இலை சேர்த்து மென்று விழுங்கினாலே, அஜீரணம் நீங்கிவிடும்.. வாந்தி, குமட்டலும் நின்றுவிடும். அதனால்தான், மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு சுக்கை அரைத்து தருவார்கள்.. இதனால், குழந்தைகளுக்கு பசியும் நன்றாக எடுக்கும்.மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு  மிஞ்சிய மருந்து என்றுமில்லை | Do you know Amazing Health Benefits in the  Dry Ginger and ...

பித்த வாந்தி இருந்தாலும், சுக்குத்தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். தலைபாரம், தலையில் நீர் கோர்த்திருந்தால், சுக்குடன் பெருங்காய தூளை சேர்த்து தலையில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். காரணம், தலையிலிருக்கும் நீரை, இந்த சுக்கு உறிஞ்சிவிடும்.

கழிவுகள்:

மலச்சிக்கல் இருப்பவர்கள், சுக்குடன், சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டாலே போதும்.. கழிவுகள், நச்சுகள் வெளியேறி, குடல் சுத்தமாகிவிடும்.. அதேபோல, சுக்குடன் சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள கிருமிகள்அழியும். . உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சுக்கு பயன்படுத்தலாம்..

இந்த ஒரு வாணலில், மல்லி விதை, மிளகை வறுத்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அதில், இந்த தூளை சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது, ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து, தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால், தேவையற்ற தொப்பை பகுதிகளிலுள்ள கொழுப்புகள் கரைந்து, உடல் எடையை குறையும்.

விஷ ஜூரம்:

இந்த சுக்குப்பொடி, விஷக்கடியையும் விரட்டும், விஷஜூரத்தையும் விரட்டும்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை போன்றவற்றை சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தாலே விஷஜூரம் பறந்துவிடும்

அதேபோல, சுக்கு தூள், உப்பு தூள் இரண்டையும் சேர்த்து பல் துலக்கி வந்தால், பல் கூச்சம் நீங்குவதுடன், வாய் துர்நாற்றமும் நீங்குமாம். சுக்கை தட்டிப்போட்டு வெந்நீர் வைத்து தலைக்கு குளித்து வந்தால், நீர்க்கோர்வை, தலைவலி வராது..

வெற்றிலை:

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். வாதம், மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கு சுக்கு நல்ல தீர்வினை தருகிறது. சிறுநீர் தொற்று ஏற்பட்டுவிட்டால், பசும்பாலில் சுக்கு தூளையும், நாட்டு சர்க்கரையும் சேர்த்து குடித்தாலே, சிறுநீரக நோய் தொற்று நீங்கிவிடும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது சுக்கிற்கும் பொருந்தும்..

காரணம், அதிக அளவு சுக்கு பயன்படுத்தினால், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் வரலாம். அதிலும் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், டாக்டரின் ஆலோசனையை பெற்று சுக்கு சாப்பிட வேண்டும்.

Related Post

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்!

Posted by - May 25, 2023 0
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5…

ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - February 7, 2024 0
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

தவெக மாநாடு : விக்கிரவாண்டியில் குவியும் தொண்டர்கள்… இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?

Posted by - October 27, 2024 0
தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக்…

சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பால் குடித்த குழந்தைகள் 4 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted by - August 14, 2023 0
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (வயது 23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4)…

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு!

Posted by - March 28, 2023 0
Ops eps case | அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதிமுக பொதுக்குழு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *