முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? – உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

167 0

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியாகிறது.

இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜனவரி 7) அன்று வெளியாகி இளம் தலைமுறையினர் முதல் அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த காதல் கதை ஒரு முக்கோண காதல் கதையாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் கிருத்திகா கூறுகையில், ”காதலிக்க நேரமில்லை படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்பில் இருக்கிறோம்.  ட்ரைலர் வெளியிட்டுள்ளோம். ஏ.ஆர். இசையமைத்துள்ளார். நல்ல இருக்கும். எல்லாருக்கும் நன்றி. அப்போது காதலிக்க நேரமிருந்தது. இப்போ யாருக்கும் நேரம் இல்லை. எல்லாரும் பயங்கர பிஸியாக இருக்கிறோம். காதலிக்க நேரமில்லை என படம் பெயர் வைத்தாலும் காதல் குறித்துதான் பேசியுள்ளோம். காதல் இல்லாமல் எதுவும் இல்லை. அது சந்தோஷத்தையும் கொடுக்குது, சின்ன கஷ்டத்தையும் கொடுக்குது என்று தான் படத்தில் பேசியுள்ளோம். நான் படம் எடுக்க டைம் எடுக்கிறது. கதையை யோசித்து அதை எடுத்து வெளியிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட டைம் தேவை படுகிறது. அதைத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து உதயநிதி அரசியல் வாழ்க்கையில் பிஸியாக உள்ளார். அவரைவைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வரவில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கிருத்திகா, “ஏன் இப்படி? போலாமே, அது முடிந்து போன கதை. அதை இப்போ பேசிட்டு இருக்கீங்க. அவரை வைத்து படம் இயக்க வேண்டும் ஆசையெல்லாம் இல்லை” என தெரிவித்தார்.

Related Post

தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடு – வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்வீட்..!!

Posted by - October 10, 2024 0
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில்…

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? நீங்க எச்சரிக்கையா இருக்கணுமாம்… உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்!

Posted by - November 22, 2023 0
பீன்ஸ் வடிவில் இருக்கும் சிறுநீரகங்கள் உங்கள் உடலில் இருக்கும் மிகவும் முக்கியமான வலிமையான உறுப்பு. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு…

“நான் போகாத ஜெயிலே இல்லை.. இன்னும் என்னை காதலிக்கிறார்கள்..” வரிச்சியூர் செல்வம்..!

Posted by - February 16, 2023 0
பாஜகவில் இருந்து விலகிய சூர்யா சிவா தன்னை ரவுடி என்று அழைத்தது வருத்தமாக இருப்பதாக வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் வரிச்சியூர் செல்வம், தனக்கும்-…

இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது..

Posted by - August 11, 2025 0
தமிழ்நாட்டில் திடீரென வீடுகளில் அபரிமிதமான மின்கட்டணம் வருவதை தடுக்க தமிழக அரசு புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *