முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை

232 0

ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராமேஷ்வரத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர். இதனை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு செங்குத்துப் பாலம் கீழே இறக்கப்பட்டது.

நாட்டின் பெருமை:

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு சென்றுவிட்டு இன்று ராமேஷ்வரம் திரும்பிய பிரதமர் மோடி, 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் பாக் ஜலசந்தியைக் கடந்து செல்லும் 2.07 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம், இந்தியாவின் பொறியியல் திறமைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் ஒரு சான்றாக நிற்கிறது.

கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீட்டர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

முதல்நாளே பழுதான புதிய பாம்பன் பாலம்:

இரண்டு ரயில் பாதைகளை தாங்கும் திறன் கொண்ட இந்தப் பாலத்தில் தற்போது ஒரு பாதையில் மட்டும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை ரயில் வேகத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து மற்றும் அதிக சுமைகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், ராமேஸ்வரம் தீவையும், நிலப்பரப்பில் உள்ள மண்டபம் பகுதியையும் இணைக்கிறது. இந்த நிலையில், ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த புதிய பாம்பன் பாலம், திறந்து வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.

பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர். இதனை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு செங்குத்துப் பாலம் கீழே இறக்கப்பட்டது.

Related Post

மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

Posted by - December 15, 2023 0
திண்டுக்கல்: லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு…

TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 22, 2025 0
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…

மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்

Posted by - November 22, 2023 0
சென்னை: நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *