விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

90 0

தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என  எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம், விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்டதை பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு, ”விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை. அவர் ஊழல் செய்த வழக்கில் சிறை சென்று வந்த செங்கோட்டையனை அருகில் வைத்துக் கொண்டு எங்களை ஊழல் கட்சி என சொல்கிறார். ஜெயலலிதாவை ரோல் மாடல் என சொல்லிக் கொண்டு யாரை அவர் ஊழல் சக்தி. நாட்டு நடப்பே விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளிக்கு வந்தால் தான் என்ன நடக்கும் என்பது தெரியும். எந்த கட்சிக்கு எந்த கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார் என்பது அவருக்கு தெரியவில்லை.

விஜய் மக்களையும் பார்க்கவில்லை, என்ன நடக்கிறது என அறிந்துக் கொள்ள டிவியையும் பார்க்கவில்லை. கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் 72 நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் அவர். எந்த கட்சி யாருடன் கூட்டணி வைத்துள்ளது என்பது விஜய்க்கு தெரியாது. அவரை முதல் செய்தியாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

நடந்தது என்ன?

கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் திமுக, அதிமுகவை ஊழல் கட்சி என தெரிவித்திருந்தார். மேலும் திமுகவை ஒழிக்க தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டுமே முடியும். இதனையடுத்து அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கடும் பதிலடி கொடுத்திருந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

 

Related Post

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…

முரண்டு பிடிக்கும் விசிக, ம.கம்யூ, மநீம.! கூட்டணிக்குள் நடப்பது என்ன.?

Posted by - March 20, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை…

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?

Posted by - December 9, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்து அமித்ஷா திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். நெருங்கும் தமிழக தேர்தல் சட்டமன்ற…

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

Posted by - April 7, 2026 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *