விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

122 0

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கிய 116 பேர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளான நேற்று தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் தொகுதிகளுக்கான நேர்காணல் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது. இதில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதனுடன், யாரை வேட்பாளராக தலைமை நியமித்தாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும். இடம் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் எனவும், பெரும்பாலானவர்களிடம் உங்கள் தொகுதியில் தவெக எவ்வளவு ஓட்டு வாங்கும் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் எம்எல்ஏ.வாக ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) இருக்கிறார். நேற்றைய நேர்காணலில் கிள்ளியூர் தொகுதியை மீண்டும்காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கலாம் என்று ஒருதரப்பினரும், தரக்கூடாது என்று மற்றொரு தரப்பினரும் முதல்வரிடம் தெரிவித்ததாக பேசப்படுகிறது. தொடர்ந்து நேர்காணல் முடிந்து வெளியே வந்த கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது.

ADஇதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர்களை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அறிவாலயம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் விருப்ப மனுக்கள் அளித்தவர்களை நேர்காணலில் பங்கேற்கவிடாமல் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தடுத்துநிறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Post

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

Posted by - April 13, 2026 0
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர்…

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - April 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

வந்தவர்கள் வளமாக… வளர்த்தவர்கள் ஓரமாக! – கோவை திமுகவில் கோஷ்டி சேர்க்கிறாரா செந்தில் பாலாஜி?

Posted by - August 20, 2025 0
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *