ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்….

278 0

இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. ஹிண்டன்பர்க், அதானி விவகாரத்தினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அதானி குழும நிறுவனங்களின் செபி தலைவர் முதலீடு இருப்பதாக அறிக்கை வெளியானதை அடுத்து சந்தை முதலீட்டாளர்கள் சற்று பதற்றம் அடைந்துள்ளனர்.

நிஃப்டி-50 மற்றும் எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை கடந்த ஒரு வாரத்தில் ஏற்ற இறக்கத்தைக் கண்டன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் திங்கட்கிழமையான இன்று பெரும் சரிவை சந்திக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் பலரும் கணித்தனர். ஏனெனில் செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் ஆகியோர் மீதான அமெரிக்க ஷார்ட் செல்லார் நிறுவனத்தின் புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளது.

முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் குறைந்த பட்சம் திங்கட்கிழமை வர்த்தகத்தின் ஆரம்ப கட்டங்களில் சில சரிவு இருக்கும். தொடர்ந்து சந்தையில் ஒருவிதமான ஏற்றம் இறக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கம் கட்டாயம் சந்தையில் இருக்கும் என சந்தை நிபுணர் அம்பரீஷ் பாலிகா தெரிவித்துள்ளார். இந்த வீழ்ச்சி எதுவரை செல்கிறது என முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். அதாவது புதிய வீழ்ச்சிக்கு சந்தை செல்கிறதா எனப்தை கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும்.

பங்குச்சந்தை கட்டுப்பட்டு அமைப்பான செபியின் தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் ஆகியோருக்கு எதிராக ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சனிக்கிழமை இரவு ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதால், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அதனுடைய தாக்கம் கட்டாயம் சந்தையில் இருக்கும். ஆனால் அடுத்த சில நாட்களில் இதன் வீரியம் குறையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதானி குழுமம் அதை மறுத்தாலும், அதற்கான விசாரணையை செபி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் செபியின் தலைவர் மீது தற்போது புகார் எழுந்துள்ளதால், இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. செபியின் தலைவர் பதவி விலக வேண்டும், அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இது குறித்து செபியின் தலைவர் மதாபி பூரி புச் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆதாரம் அற்றவை என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மிட் மற்றும் ஸ்மால் கேப்களில் பங்குகளுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சரிவில் தொடங்கியுள்ளன. மேலும் இந்த சரிவை முதலீட்டாளர்கள் பங்கைகளை வாங்குவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.

Related Post

ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

Posted by - July 1, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி. உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி

Posted by - August 14, 2023 0
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே…

பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

Posted by - December 13, 2025 0
அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது”…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *