2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

146 0

 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும் சேலையும் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கேற்ப, இயற்கைக்கும், சூரியனுக்கும், உழவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களின் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாவாகும். இது தை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் ஆகும். இந்த பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரித்து, புதிய தொடக்கத்தை வரவேற்கும் நாளாக அமைந்துள்ளது. அடுத்ததாக தைப்பொங்கல் நாளில் புது அரிசியில் இனிப்பு பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து வழிபடுவர். வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டாடுவார்கள். அடுத்தாக மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கலும் கொணாடாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு

இதனையடுத்து தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு வழங்கப்பட்டது.கடந்த 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. எனவே இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.5000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியானது.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிகைக விடுத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு பொங்கல் ரொக்கப்பணம் தொடர்பாக எந்தவித முடிவையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் ரொக்கப்பணம் வழங்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது. ஆயிரம் ரூபாயா.? 3 ஆயிரம் ரூபாயா என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தேர்தல் தினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பச்சரிசி,சக்கரை ஒதுக்கீடு

இந்த நிலையில் பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டி, 1 கோடியே 77 லட்சத்து 64ஆயிரம் சேலை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Post

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

வாக்காளர் பட்டியல் திருத்தம் – வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்

Posted by - November 4, 2025 0
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது.TN SIR ECI:  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், இன்று…

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் – ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு

Posted by - August 21, 2025 0
#TVK | #TVKVijay |#VijaySpeech|#TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKMaduraiMaanaduUpdateWithpixelmedia…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *