தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் – ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு

105 0

#TVK | #TVKVijay |#VijaySpeech|#TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKMaduraiMaanaduUpdateWithpixelmedia

தவெக-வின் 2-வது மாநில மாநாட்டில் பேசிய கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திமுகவின் ஊழலை பற்றி பேசியதாலேயே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டதாக கூறினார்.

மதுரை பாரபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பிரமாண்டமாக, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற போது, கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்தும், அமைச்சர் மூர்த்தி குறித்தும் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

“மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்“

இந்த மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவை கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும், மதுரையை சேர்ந்த அமைச்சர் மூர்த்தி, தவெகவின் மதுரை மாநாட்டிற்கு பல தடைகளை உருவாக்கியதாக குற்றம்சாட்டினார்.

“ஊழலை வெளிப்படுத்தியதாலேயே பிடிஆர் ஓரங்கட்டப்பட்டார்“

இதே மதுரை மண்ணைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சரின் மருமகனும், மகனும் மிகப் பெரிய ஊழல் செய்துவிட்டதாக கூறினார்.

அவர் அப்படி சொன்ன உண்மைக்காக அமைச்சரவையிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் என ஆதவ் அர்ஜுனா கூறினார். மேலும், திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்வதாக பட்டியலிட்டு பேசினார்.

அண்ணாவின் குறிக்கோள்களில் இருந்து திமுக விலகிவிட்டதாகவும், அண்ணாவின் கொள்கைகளை எந்த கட்சியும் தற்போது பின்பற்ற வில்லை என்றும், அதை செய்யத் தான் தவெக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“பின்புற வாசல் வழியாக பாஜக-வை உள்ளே நுழையவிட்ட அதிமுக“

அதேபோல், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மற்றும் அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து இன்றைய அதிமுக விலகிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் அதிகாரத்தை அடைவதற்காக, இன்றைய அதிமுக தலைமை, பாஜக-வை பின்புற வாசல் வழியாக வரவழைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.

ஆனால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி, அதை அரசியல் வெற்றியாக மாற்றி, 2026-ல் மிகப் பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி, ஆட்சியில் அமர்ந்து, அவர்களது கொள்கைகளை நிறைவேற்றுவோம் என ஆதவ் பேசினார்.

அறிஞர் அண்ணா கூறியதுபோல், ஏழைகளுக்கான அரசாக, ஒரு நேர்மையான அரசாக உருவாக்க, விஜய்யை, தம்பி வா, தலைமை ஏற்க வா என அறிஞர் அண்ணாவைப் போல் அழைப்பதாகக் கூறி அவ உரையை நிறைவு செய்தார்.

 

Related Post

qwertyujkl

ரஜினியை திமுக மிரட்டியது இப்படித்தான்..

Posted by - March 18, 2026 0
ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என சொன்ன உடனேயே கிட்டதட்ட 18 சதவிகித ஓட்டு இருப்பது தெரிய வந்தது. இதனைப் பார்த்து திமுகவுக்கு பயம் வந்து விட்டது…

தேர்தலுக்கு தயாரான அதிமுக.!

Posted by - December 11, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைப்பு…
Gemini Generated Image 4cdtsc4cdtsc4cdt

பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?

Posted by - April 3, 2026 0
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன? தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில்,…

விஜய் பிரசாரம்; தவெக-விற்கு செல்லுமிடமெல்லாம் சிக்கல் தான்; கரூரில் கருணை காட்டாத காவல்துறை

Posted by - September 26, 2025 0
தவெக-விற்கு செல்லும் இடமெல்லாம் சிக்கல் தான் என்று சொல்லும் அளவிற்கு, விஜய்யின் கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் அனுமதி பிரச்னை தான். என்னவென்று பார்க்கலாம். 2026…
tvkvijay cm

TVK Vijay : ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்க… ஆளுநருக்கு கடிதம் எழுதிய விஜய்.! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா.?

Posted by - May 5, 2026 0
TVK leader Vijay letter to the governor : தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தவெக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *