2026 புத்தாண்டு கொண்டாட்டம் : இதெற்கெல்லாம் அனுமதி இல்லை..சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

120 0

அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : புத்தாண்டு (2026) கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இன்று (டிசம்பர் 31, 2025) மற்றும் நாளை (ஜனவரி 1, 2026) மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் குளிக்கவோ, கடலில் இறங்கவோ அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மது அருந்த அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்கள், பார்கள் உள்ளிட்ட இடங்களுக்கு குழந்தைகளை கூட்டிச் செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்த விரும்பினால் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சத்த தொல்லை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புத்தாண்டு இரவில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுக்க இன்று இரவு 9 மணி முதல் சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும்.பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 30 கண்காணிப்பு மற்றும் சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பைக் ரேஸ் காரணமாக ஏற்பட்ட விபத்துகளை தவிர்க்க இது உதவும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த கட்டுப்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

பாத்ரூம்-ல் எட்டி பார்த்த அமுதவானன் !

Posted by - November 23, 2022 0
பிக்பாஸ்- 6 பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்-6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ்…

#BreakingNews‌ | காவலர் – நடத்துநர் சமாதானம்

Posted by - May 25, 2024 0
நாங்குநேரியில் காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் சமாதானம்! #Tirunelveli #Nanguneri #Police #Conductor #TNpolice | #Transportdepartment | #Trafficpolice…

எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜீவானந்தம் வைத்த ட்விஸ்ட்.. நான்கு மருமகளிடம் சிக்கி சின்னாபின்னமாக போகும் குணசேகரன்

Posted by - December 20, 2024 0
முடிந்து போன ஒரு சீரியலுக்கு இந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது முழுக்க முழுக்க எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டுமே. யாருமே எதிர்பார்க்காத வகையில் அவசர…

ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

Posted by - September 25, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *