Mohan G Arrest: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைப் பேச்சு.. இயக்குநர் மோகன் ஜி கைது!

215 0

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது சாதி ரீதியிலான முத்திரை குத்தப்பட்டாலும் தொடர்ச்சியாக சினிமாவில் தன்னுடைய திறமையாலும், தான் பார்த்த, தன்னை பாதித்த சமூக நிகழ்வுகளையும் மையப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார். இவரது படம் வெளியாகும் போதெல்லாம் அதில் பேசப்படும் கதைக்களம், காட்சிகள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகும்.

இயக்குநர் மோகன் ஜி: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ் திரையலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது சாதி ரீதியிலான முத்திரை குத்தப்பட்டாலும் தொடர்ச்சியாக சினிமாவில் தன்னுடைய திறமையாலும், தான் பார்த்த சமூக நிகழ்வுகளையும் மையப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார். இதனிடையே மோகன் ஜி ஒரு பேட்டியில், “நாம் பெரிதாக நினைக்கும் ஒரு கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலந்திருப்பதாக செவி வழி செய்திகளை கேட்டிருக்கிறேன். ஆனால் இது தொடர்பான செய்திகளை வெளியிடாமல் தடுத்து உடனடியாக அந்த பிரச்சினையை சரி செய்து வேறு மாதிரி வழக்காக பதிவு செய்து அதனை மறைத்து விட்டார்கள்” என தெரிவித்திருந்தார்.

பழனியில் தரம் இல்லாத பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை வைத்து பேசிய மோகன் ஜி. “அந்த தரம் இல்லாத விஷயம் என்னவென்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்தார்களா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “எனக்கு அங்கு வேலை செய்பவர்கள் தெரிந்தவர்கள் சொன்ன விஷயம் என்னவென்றால் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதாக கூறினார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லா இடத்திலும் நடக்கிறது என தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து இன்று காலை இயக்குநர் மோகன்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.இப்படியான நிலையில் பாமக செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப்பதிவில், “இயக்குனர் மோகன் கைது தொடர்பாக அண்ணன் வழக்கறிஞர் பாலு அவர்கள் தமிழக உயர் காவல் துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்

எழுந்த சர்ச்சை.. அளித்த விளக்கம்

முன்னதாக உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக ஆந்திர மாநில அரசு திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியது. லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் தான் இந்த கலப்படம் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்யும் திண்டுக்கலைச் சேர்ந்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது.

இப்படியான நிலையில் திருப்பதியில் லட்டு விஷயத்தில் எழுந்த பிரச்னை தீர உடனடியாக யாகம் வளர்க்கப்பட்டு கோயில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் எனவும் தேவஸ்தானம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், திருப்பதியில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் இது போன்ற விஷயம் நடைபெற்று இருப்பதாக தகவல் பரவியது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் நெய் திண்டுக்கலைச் சேர்ந்த ஆவின் நிறுவனம் தான் வழங்குகிறது. திருப்பதிக்கு நெய் வழங்கும் நிறுவனம் வழங்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்தார். மேலும் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் அனைத்து பொருட்களும் தரமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவதூறு செய்தி பரப்பியவர்கள் மீதும், இனிமேல் பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து இந்த தகவலுக்கு விளக்கம் அளித்த தமிழக அரசு பழனி பஞ்சாமிர்தத்தில் அப்படி எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு கைகொடுக்கும் கொடிபசலை இலைகள்

Posted by - December 11, 2023 0
சென்னை: கொடிபசலை கீரைகளின் நன்மை என்ன தெரியுமா? சரும பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் இந்த கீரையின் சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா? சிகப்பு, பச்சை என்று 2 வகையான கொடி…

சற்றுமுன் வந்த மழை அலர்ட்.. 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் சம்பவம்! பறந்து வந்த வானிலை அறிவிப்பு

Posted by - December 20, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரம் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியான வானிலை…

கண்பார்வையை அதிகரிக்க கேரட் மட்டுமில்லை இந்த எளிய பொருட்களையும் சாப்பிடலாமாம்… ட்ரை பண்ணுங்க…!

Posted by - October 17, 2023 0
நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று கண்கள். நம் கண்களால் தான் நாம் இந்த உலகை ரசிக்க முடிகிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறையால் கண்…

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை (நவ.4) மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *