டிசம்பர் 2024 முடிவதற்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான 2 வேலைகள்: இதுதான் கடைசி வாய்ப்பு..

198 0

இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் (aadhaar) மற்றும் பான் (pan) கார்டு சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். குறிப்பாக இலவச ஆதார் அப்டேட் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று பார்க்கலாம்.1.பான்-ஆதார் இணைப்பு (aadhaar pan card link): வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் கார்டை (Aadhaar Card) பான் கார்டுடன் (pan card) இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதார் உடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் எளிமையாகச் சோதனை செய்யப்படும், இதுதவிர பான் கார்டை வைத்துச் செய்யப்படும் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பான் செயல் இழக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதால் பான் தகவல்கள் கூடுதல் பாதுகாப்பு உடன் இருக்கும். எனவே ஃபின்டெக் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாது. ஒருவேளை ஃபின் டெக் நிறுவனங்கள் முறையாக உங்களிடம் வாங்கிய டேட்டா மூலம் தொடர்ந்து கால் செய்யலாம். அதேசமயம் உங்கள் பான் விவரங்களை அவர்கள் வேறு வழியில் வாங்கி இருந்தால் அதைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியாது.அதேபோல் 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் உடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த விதிமுறை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.மேலும் வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) சென்று தேவையான விவரங்களைக் கொடுத்து ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க முடியும்.2.இலவச ஆதார் அப்டேட் (aadhaar free update): உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 14-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.குறிப்பாக 10 வருடங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஆதார் விவரங்களை தற்போது அப்டேட் செய்து வைக்குமாறு UIDAI பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் ஆதார் அட்டையில் உள்ள தங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற சில விவரங்களை மட்டும் தற்போது ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் ஆதாரிலுள்ள கருவிழி, கைரேகைகள், மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்றவற்றை ஆஃப்லைன் முறை மூலமாக மட்டுமே உங்களால் அப்டேட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களைச் செலவின்றி அப்டேட் செய்ய விரும்பினால் myaadhaar.uidai.gov.in என்ற UIDAI இணையதளத்துக்குச் செல்லுங்கள். இந்த இணைய தளத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைக் கொடுத்து இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய முடியும்.

Related Post

தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய பிரச்சினையாகிடும்

Posted by - December 15, 2023 0
டெல்லி: உடல் எடையைக் குறைக்க முயல்வோர் நிச்சயம் சில வகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.…

தந்தையைப் பழிவாங்க மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 15 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 2, 2022 0
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே…

டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை

Posted by - June 7, 2023 0
புதுடெல்லி: டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஜாமியா நகரைச் சேர்ந்த…

உ.பி.யில் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு: அதிக வெப்பம் காரணமா?

Posted by - June 19, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். மருத்துவமனையில சிகிச்சை…

முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

Posted by - August 10, 2024 0
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *