ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக.. வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்

178 0

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல்  செய்ய இன்றே கடைசி நாள் திமுக வேட்பாளர் மற்றும் நாதக வேட்பாளர் வேட்புமனு இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல்  செய்ய இன்றே கடைசி நாளான இன்று முக்கிய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக,  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், திமுக 125 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, உடல்நலக்குறைவால் அவர் திடீரென காலமானார்.இதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் அவரும் காலமானார். இதனால்  5 ஆண்டுகளுக்குள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இரண்டாவது முறையாக, இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

விலகிய பாஜக, அதிமுக:

இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். என்று தெரிவித்தார். இதனால் இந்த தேர்தலில் பிரதான கட்சியான திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகிறது.

திமுக போட்டி:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திமுக போட்டியிட காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. திமுக சார்பில் திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) என்று திமுக அறிவித்திருந்தது.

வேப்மனு தாக்கல்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கியது, ஆனால், பொங்கல் அரசு விடுமுறை அனைத்தையும் கருத்தில் கொண்டால், வெறும் 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்த நிலையில் இன்று வேப்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

கடைசி நாளான இன்று திமுக வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரும் நாதக சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமியும் வேட்புமனு இன்று தாக்கல் செய்ய உள்ளனர். இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட 9 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நாளை ( சனிக்கிழமை) பரீசிலனை செய்யப்படுகிறது. மேலும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும், அதன் பின்னர் அன்று மாலை இறுதி வேட்பாளார் பட்டியல் வெளியிடப்படும்

இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள்:

  • வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் – 10.01.2025
  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – 17.01.2025
  • வேப்பு மனு திரும்ப பெற கடைசி நாள் – 20.01.2025
  • வாக்குப்பதிவு – 05.02.2025
  • வாக்கு எண்ணிக்கை – 08.02.2025

Related Post

நீண்ட இழுபறிக்கு பின் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

Posted by - March 27, 2024 0
மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்து மணிசங்கர் அய்யரின் மகள், ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர்…

விஜயின் முதல் அரசியல் மாநாடு… விழாக்கோலம் பூண்டுள்ள விக்கிரவாண்டி

Posted by - October 27, 2024 0
அரசியல் வருகைக்கு பின், முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்ன சொல்லப்போகிறார்?, அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே மட்டுமன்றி, தமிழ்நாடு…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

Posted by - October 8, 2025 0
சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர்…

மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் 2 புதிய தமிழக முகங்கள்… வெளியான பட்டியல்?

Posted by - June 7, 2024 0
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *