இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

191 0

தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

நம் உயி­ரு­டன் கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு உடன்­பி­றப்­பு­க­ளுக்கு, ‘உங்­க­ளில் ஒரு­வன்’ எழு­தும் தொடர் மடல். ஆம்.. இது ஒரு தொடர்ச்­சி­யான போராட்­டம் என்று தான் தனது கடிதத்தை ஆரம்பித்திருக்கிறார் முதலமைச்சர்.

ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் – ஸ்டாலின்

இது பண்­பாட்­டுப் படை­யெ­டுப்பை முறி­ய­டிக்­கும் அற­வ­ழிப் போராட்­டம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்­னைத் தமிழை ஆதிக்க மொழி­யி­ட­ மி­ருந்து பாது­காக்­கின்ற போராட்­டம் என கூறியுள்ளார். தாய்­மொ­ழி­யைக் காலத்­திற்­கேற்ற அறி­வி­யல்தொழில்­நுட்­பத் தன்­மை­யு­டன் வளர்த்­­தெடுக்­கும் போராட்­டம் என கூறியுள்ள அவர், 85 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சளைக்­கா­மல் தொட­ரும் வெற்­றி­க­ர­மான போராட்­டம், அது­தான் தமி­ழர்­க­ளின் உணர்­வு­டன் கலந்­துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்­புப் போராட்­டம்! என முழங்கியுள்ளார்.

இந்­தியை அவர்­கள் திணித்­துக் கொண்டே இருக்­கி­றார்­கள், நாம் எதிர்த்­துக் கொண்டே இருக்­கி­றோம். ஆதிக்­கத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் வரை ஆதிக்­கத்­துக்கு எதி­ரான போராட்­டம் தொட­ரும் என்று தான் உறுதி அளிப்பதாக கடிதத்தில் கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

“உயிர் அடங்கும் வரை தாய்மொழியை காப்பாற்றும் உணர்வு அடங்காது”

ஆதிக்­கத்தை எதிர்ப்­ப­தும், தாய்­ மொ­ழி­யைக் காப்­ப­தும் திரா­விட முன்­னேற்­றக் கழக உடன்­பி­றப்­பு­க­ளின் ரத்தத்தில் ஊறிய உணர்வு என்றும், உயிர் அடங்­கும் வரை அந்த உணர்வு அடங்­காது என்று உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து வரி­யைப் பெற்­றுக்­கொண்டு, தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் கல்­விக்­கான நிதியை ஒதுக்­கா­மல், மத்திய பாஜக அரசு வஞ்­சித்து வரும் போக்கை தமிழ்­நாட்­டின் பள்ளி மாண­வர்­க­ளும்­கூட தெளி­வாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள் என கூறியுள்ள அவர், கடந்த 21, 22 ஆகிய தேதி­க­ளில்கட­லூர் மாவட்­டத்­தில் பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­ற­து­டன், பெற்­றோர்-­ – ஆ­சி­ரி­யர் மாநாட்­டில் கலந்து கொண்டு பேசும்­போது, மத்திய அரசு நமக்கு நிதி தர மறுப்­பதை ஆதா­ரத்­து­டன் சுட்­டிக்­காட்டி, “10 ஆயி­ரம் கோடி தந்­தா­லும் இந்­தி­யைத் திணிக்­கும் தேசிய கல்­விக் கொள்­கையை ஏற்­க­மாட்­டோம்” என உறு­தி­யு­டன் தெரி­வித்­ததாக எழுதியுள்ளார்.

இந்தி படிப்பதை தடுக்கவில்லை..திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் – ஸ்டாலின்

மேலும், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என கூறியுள்ள அவர், ‘இந்தி படிக்­காதே’ என்று யாரை­யும் தடுக்­கவில்லை, ‘இந்­தியை எங்­கள் மீது திணிக்­காதே!’ என்று ஆதிக்க சக்­தி­க­ளு­டன் அறப்­போ­ரைத் தொடர்ந்து நடத்­துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்­த போரில் ஒரு­போ­தும் சம­ர­ச­மில்லை. இத்­தனை உறு­தி­யாக இந்­தி திணிப்பை ஏன் எதிர்க்­கி­றோம் என்­பதை எதி­ரி­க­ளுக்­காக மட்­டு­மல்ல, இளம் ­த­லை­மு­றை­யி­ன­ரும் புரிந்­து­கொள்­வ­தற்­கான முதல் மடல் இது. தொடர்ச்­சி­யாக மடல் எழு­து­வேன் எனவும் கூறி, முதல் கடிதத்தை நிறைவு செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Related Post

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

அடுத்த 10 நாட்களுக்கு: மழைக்கான வாய்ப்பு குறைவு

Posted by - November 24, 2022 0
காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில்…

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

Posted by - July 10, 2023 0
நாமக்கல்: இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர்…

”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?

Posted by - May 12, 2025 0
வன்னிய இளைஞர் மாநாட்டில் பாமக நிறுவனம் ராமதாஸ், மகன் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல என, அதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *