பாஜக மாநிலத் தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

108 0

பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

போட்டியின்றி தேர்வானார் நயினார் நாகேந்திரன்

மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட நயிநாருக்கு மட்டுமே கட்சித் தலைமை அனுமதி வழங்கியதையடுத்து, நயினார் நாகேந்திரன் இன்று, அண்ணாமலை, எல். முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில், தனது விருப்ப மனுவை, பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியிடம் வழங்கினார். நயினார் நாகேந்திரன் தலைவராவதற்கு, அண்ணாமலை, எல். முருகன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தன்னை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தேர்தல் அதிகாரியிடம் தான் கேட்ட வேண்டும் என்று கூறினார்.

இதனிடையே, மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு வழங்கிய நிலையில், அவர் பாஜக மாநிலத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

மாநிலத் தலைவர் பதவிக்கான விதிகளை தளர்த்திய பாஜக தலைமை

மேலும், மாநிலத் தலைவர் பதவிக்கு குறைந்தது 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி கூறியுள்ளார். ஏற்கனவே, பீகார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையால் இதுபோன்று விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனால், நயினார் நாகேந்திரன் தலைவராவதில் சிக்கல் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Post

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா… விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு

Posted by - September 8, 2025 0
விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம்…

அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

Posted by - April 10, 2025 0
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு…

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை – மகன்! காரணமான முகுந்தன் யார்?

Posted by - December 28, 2024 0
விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம்…

பி.டி.ஆர் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்… சுதந்திரமான சோதனை செய்யாதது ஏன்? அண்ணாமலை கேள்வி

Posted by - April 23, 2023 0
ஆடியோ சர்ச்சை குறித்த பழனிவேல் தியாகராஜனின் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை…

’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

Posted by - September 18, 2025 0
சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி. நாம் தும்மினாலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *