டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?

132 0

முதலமைச்சர் ஸ்டாலினின் அண்மையில் டெல்லி சென்று வந்த நிலையில், சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த, சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்?

தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் அமலாகக்த்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஷ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் கனிம வளக் கொள்ளை  தொடர்பான வழக்குகளிலும் விசாரணை அதிகரிகளாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கையும், பியூஷ் குமார் மற்றும் கார்த்திக் விசாரித்து வந்தனர்.

முதலமைச்சர் டெல்லி பயணம்:

டாஸ்மாக் அலுவலகம், முதலமைச்சரின் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு என, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதோடு, டாஸ்மாக்கில் முறைகேடு செய்யப்பட்ட பணம் ஆகாஷ் பாஸ்கரன் வாயிலாக, சினிமாவில் முதலீடு செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதில் உதயநிதியின் தலையீடு இருப்பதாகவும் சிலர் இணையத்தில் தீவிரமாக களமாடி வந்தனர். இத்தகைய பரபரப்பான சூழலில் தான், 3 ஆண்டுகளாக இல்லாத வகையில், கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

மூன்று ஆண்டுகளாக பங்கேற்காத நிதி ஆயோக் கூட்டத்தில் இப்போது மட்டும் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். வழக்குகளில் இருந்து தனது அரசையும், மகனையும் காப்ப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் டெல்லி செல்வதாக விமர்சித்து இருந்தனர். ஆனால், மாநிலத்திற்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கவே டெல்லி சென்றதாக, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் டாஸ்மாக், செந்தில் பாலாஜி மற்றும் கனிமவளக் கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த, அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிடப்பில் போடப்படும் வழக்குகள்:

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், டாஸ்மாக் வழக்கில் பல அதிரடியான திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த வழக்குகளின் விசாரணை முடங்கும் அல்லது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் வழக்கை தற்போதைக்கு பெரிதாக்க மத்திய அரசு விரும்பவில்லையா? அல்லது திமுக உடன் திரை மறைவில் ஏதேனும் ஒப்பந்தங்கள் உறுதியாகியுள்ளனவா? என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரம், அதிகாரிகள் மாற்றம் என்பது திமுகவினருக்கு சிறிது காலத்திற்கு நிம்மதியை தரும் என கூறப்படுகிறது.

Related Post

நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி

Posted by - February 17, 2025 0
இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. PM SHRI திட்டத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கடித்தத்தை வெளியிட்டு அதிமுக…

அரசியலில் தனித்து விடப்பட்டதால் அந்தர் பல்டி.?!

Posted by - February 21, 2026 0
அரசியலில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், விபரீதமான முடிவு ஒன்றை எடுக்க உள்ளதுபோல் தெரிகிறது. இன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய அவர், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

Posted by - March 31, 2026 0
விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் அச்சத்தை…

மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?

Posted by - December 10, 2025 0
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 3 ஆயிம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *