திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

160 0

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜுன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன் 25ஆம் தேதி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து ஜூன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் புறக்கணிப்பு போராட்டத்தில் அனைத்து நிலை வருவாய் நிலை அலுவலர்களும் ஈடுபட உள்ளதாகவும் சுமார் 40 ஆயிரம் பேர் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எதற்காக இந்த போராட்டம்?

பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ( ஃபெரா அமைப்பு) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிருப்தி

2021ஆம் ஆண்டு திமுக அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், அரசு காலி இடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன.

எனினும் இவை முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன. இந்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி, அவ்வப்போது இந்த சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஜூன் 25-ல் போராட்டம்

இந்த நிலையில், தங்களின் பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன் 25ஆம் தேதி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Post

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Posted by - November 23, 2022 0
பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி…

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது.. எங்கே தெரியுமா?

Posted by - November 29, 2023 0
சென்னை: இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி…

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?

Posted by - July 18, 2025 0
அஜித்குமார் மரண வழக்கின் தாக்கம் குறைவதற்கு முன்பே, மயிலாடுதுறை டிஎஸ்பி உயர் அதிகாரிகள் மீது அளித்த குற்றச்சாட்டு திமுகவிற்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறையால் ஆளுங்கட்சியான…

கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

Posted by - September 13, 2023 0
திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *