ஆபரேஷன் நயினார்… பாஜகவுக்கு பாடம் கற்பிக்க திமுக போடும் திட்டம்

54 0

சட்டப் பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சியில் யாரெல்லாம் ஜெயிக்க வேண்டும், எத்தனை இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதை எல்லாம் விட யாரை எல்லாம் ஜெயிக்கவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை இம்முறை உறுதியான முடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி திமுக தலைமையின் நாக்-அவுட் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சுட்டுகிறார்கள்.

இதுகுறித்து திமுக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக இதுவரை 3 விதமான சர்வேக்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தலைவர் ஸ்டாலினே தனது நேரடிப் பார்வையில் வேட்பாளர் தேர்வை இறுதி செய்து வருகிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக இம்முறை திமுக-வுக்கு குடைச்சல் கொடுத்து வருவதால் அந்தக் கட்சிக்கு கடந்த முறை கிடைத்த 4 தொகுதிகள்கூட கிடைக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார் தலைவர். அதற்கேற்ப, பாஜக முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் முடிந்தவரைக்கும் திமுக வேட்பாளர்களையே களமிறக்குவது என்ற திட்டத்தையும் வைத்திருக்கிறது திமுக.

நெல்லையில் ஒரு தொகுதியில் திமுக தோற்றால்கூட நெல்லை திமுக-வை கூண்டோடு கலைத்து விடுவேன் என்று ஏற்கெனவே ஒன் டு ஒன் சந்திப்பில் கட்சியினரை ஸ்டாலின் எச்சரித்து அனுப்பினார். அந்த வகையில், பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனை எப்படியும் தோற்கடித்தாக வேண்டும் என நினைக்கும் தலைவர், அதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் நயினார் தோற்றிருந்தாலும் வெற்றிக்கு மிக அருகில் வந்திருந்தார். நெல்லை சட்டமன்றத் தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகளை விட பிள்ளைமார் சமூகத்தினரின் வாக்குகள் அதிகமாக உள்ளன. 2021 தேர்தலில் பிள்ளைமார் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன. அதை கணக்கில் கொண்டு இம்முறை அதே சமுதாயத்தை சேர்ந்த திமுக நெல்லை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுப்ரமணியனை நயினாருக்கு எதிராக நிறுத்தலாமா என தீவிரமாக யோசித்து வருகிறது தலைமை.

இதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் இதர தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இறுதி செய்து பரிந்துரைக்க மண்டலப் பொறுப்பாளரான கனிமொழிக்கு அசைன்மென்ட் வழங்கப்பட்டது. தனது பரிந்துரைகள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதற்காக கனிமொழியும் தன் பங்கிற்கு வேட்பாளர் தேர்வு தொடர்பாக தனிப்பட்ட முறையில் சர்வேக்களை நடத்தி முடித்திருக்கிறார். அதன் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு 3 பேர் கொண்ட பட்டியலை அவரும் தலைமைக்கு பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது” என்றனர்.

Related Post

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

Posted by - November 24, 2025 0
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்

Posted by - January 21, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது முன்னாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *