இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

194 0

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. பணி நீக்க நடவடிக்கைகள் இந்தியாவில் இருக்காது என்றாலும், டிசம்பர் மாதத்தில் அதிகரித்து, பின்னர் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் தற்போது அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

டிசம்பர் மாதத்தில் 8.30 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், இந்தாண்டு ஜனவரியில் 7.14 சதவிகிதமாகக் குறைந்தது. பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக அதிகரித்த நிலையில், மார்ச் மாதத்தில் 7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 26.8 சதவிகிதமாகவும், குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.8 சதவிகிதமாகவும், புதுச்சேரியில் 1.5 சதவிகிதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது.

பண்டிகை காலத்திற்குப் பிறகு, சில்லறை விற்பனை, விநியோகம், நிதி சேவை உள்ளிட்ட துறைகளில் பணியாளர்களுக்கான தேவை குறைந்ததே, வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. ஐ.டி. துறையில் புதிய வேலைவாய்ப்பு உருவாகாததும், தேர்வுக் காலம் என்பதால் சுற்றுலாத் துறை தொய்வு அடைந்திருப்பதும், மற்ற காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

ஆனால், உட்கட்டமைப்பு, பொறியியல், கட்டுமானத் துறைகள் காரணமாகவே ஓரளவு வேலைவாய்ப்பு உருவாகி வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, விரைவில் இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வர அதிக வாய்ப்புள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாகும் என துறை சார்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Post

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

Posted by - August 20, 2025 0
புதுடில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - June 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்

Posted by - September 15, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய…

மணிப்பூரில் பாதுகாப்பு வீரர்கள்- துப்பாக்கி ஏந்திய கும்பலுக்கு இடையே கடும் சண்டை

Posted by - September 8, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *