ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

224 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார் தொடங்கி உள்ளனர். ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம் |  Tamil News Andhra Pradesh, a new scheme to escort women home at night will  see karate-trained female police escorts

இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வேலை உள்ளிட்ட காரணங்களால் தனியாக பயணம் செய்யும் பெண்களை பாதுகாப்பாக போலீசார் வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுவார்கள்.

இரவு நேரங்களில் 100, 112, 29 51 75 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு போன் செய்தால் போதும், சம்பவ இடத்திற்கு பெண் காவலர்கள் பைக்கில் வருவார்கள். சம்பந்தப்பட்ட பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பணிபுரிய உள்ள பெண் போலீசாருக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்திக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Related Post

பெங்களூருவில் திருமணத்துக்கு மறுத்த காதலியை 16 இடங்களில் வெட்டி கொன்ற வாலிபர்

Posted by - March 2, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம், கோண சீமா டாக்டர் அம்பேத்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நளமதி அப்புலு சவுத்ரி. இவரது மகள் லீலா பவித்ரா (வயது 28). மகளின் படிப்புக்காக…

மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

Posted by - June 30, 2023 0
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும்…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடக்கம்

Posted by - June 5, 2023 0
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *