சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

229 0

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை முறைப்படி தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.சென்னையில் 2.79 லட்சம் கட்டடங்களை மறு அளவீடு செய்யும் பணி தொடக்கம்:  கூடுதலாக சொத்து வரி கிடைக்க வாய்ப்பு | possibility of additional property  tax for the Chennai ...

சென்னை மாநகராட்சி தான் வசூலிக்கும் சொத்துவரி மூலம் மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தூய்மை பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வரும் 30-ந்தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும், வணிகர்களும், சொத்துவரி மற்றும் தொழில்வரியை செலுத்திட வேண்டுமென சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி 28-ந்தேதி (மிலாடி நபி) மற்றும் 30-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன் கட்டிடத்திலுள்ள வருவாய்த்துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த்துறையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

சொத்துவரி மற்றும் தொழில்வரியினை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அக்டோபர் 1-ந்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை இணையதளத்திலும், தலைமையகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

வர்த்தக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது- ரூ.1945-க்கு விற்பனை

Posted by - July 1, 2023 0
சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலை…

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்! கேப்டனின் உடலில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

Posted by - November 30, 2023 0
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு என்னென்ன உடல்நிலை பிரச்சினைகள் என்பது குறித்து நமக்கு கிடைத்த தகவல்களை பார்ப்போம். தொண்டர்கள், ரசிகர்களால் கேப்டன் என அன்போடு…

பள்ளி மாணவிகளை வைத்து தொழில்… மகள் மூலம் வலை விரிப்பு.. பெண் புரோக்கரின் திடுக்கிடும் பின்னணி

Posted by - May 22, 2024 0
சென்னையில் பள்ளி மாணவிகளை லாட்ஜுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த பெண் புரோக்கர் குடும்பத்தினரோடு சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை, வளசரவாக்கம்  வீட்டில் வைத்து…

தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?

Posted by - May 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அடுத்த மாதம் வரும் அவருடைய பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்…

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 1, 2023 0
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக உள்ளார் K.S.தென்னரசு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *