சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்.. காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி

202 0

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அத்துடன் பன்னீரும் இருந்தால், அட்டகாசமான சுவையில் ஒரு கிரேவியை செய்யலாம்.

இந்த காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.பன்னீர் கிரேவி சப்பாத்தி பூரிக்கு ஏற்றது|sidedish for chapathi,poori,pulao|Restaurant  style gravy - YouTube

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி – 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* கறிப்பிலை – சிறிது

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* உப்பு -1 டீஸ்பூன்

* மஞ்சுள் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* காலிஃப்ளவர் – 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

* தேங்காய் பால் – 150 மிலி

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் மூடி வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து ஒருநிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு காலிஃப்ளவர் சேர்த்து ஒருமுறை கிளறி, 1 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* காலிஃப்ளவர் நன்கு வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து, இறுதியாக தேங்காய் பாலை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி தயார்.

Related Post

மார்கழியில் ஏன் திருமணம் செய்வதில்லை தெரியுமா?

Posted by - December 30, 2022 0
Margazhi month 2022 | மார்கழி மாதத்தில் பயிர் வளரும் காலமாகும். இந்த மாதத்தில் விதை விதைப்பதில்லை. அதனால்தான் வம்ச விருத்திக்காக செய்யப்படும் திருமணமும் இந்த மாதம்…

செல்டவருக்கு ரூ.7500 கோடி நிலுவைத்தொகை… வங்கிகளில் கடன் கேட்டு அலையும் Vi நிறுவனம்!

Posted by - January 7, 2023 0
அறிக்கையின்படி, Vi நிறுவனம்  Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi ,…

ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா

Posted by - July 6, 2023 0
ரச்சிதா சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் செல்லும் முன்பே அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். அந்த ஷோவில் பங்கேற்றபோது அவரது பெற்றோர்…

வீடே கமகமக்கும் வகையில் சுண்டக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted by - September 21, 2023 0
தினமும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டால் தான் உண்ணும் உணவு போரடிக்காமல் இருக்கும். அப்படி தினமும் வித்தியாசமான குழம்புக்கு எங்க போறது என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் செய்யலாம்.…

பெட்ரூமில் இந்த பொருட்கள் இருந்தால் இப்பவே தூக்கியெறிங்க…!

Posted by - May 10, 2023 0
பலரும் தான் இருக்கும் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். குறிப்பாக கிச்சன், வரவேற்பரை, பால்கனி மற்றும் படுக்கையறைகளை நேர்த்தியாக வைத்திருக்க விரும்புவோம். ஆனால்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *