கல்பாக்கம் முதல் சென்னை வரை பிளான்.. மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை.

196 0

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வருகிறார். இதில், சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதில், தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிடும் வகையில் அரசியல் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பாஜகவை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியும் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார். முதல் நாள் பயணத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டாம் நாளில் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன், முடிவுற்ற பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வர உள்ளார். இதில், மார்ச் 4 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் மாலை 5.15 மணிக்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். மேலும், மார்ச் மாத மத்தியிலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் இந்த பயணத் திட்டம் இருக்கும் என்று தெரிகிறது.

இதனிடையே, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நாராயணன் திருப்பதி, லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் நாளை டெல்லி செல்ல உள்ளனர். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

Related Post

ஜியோ உடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

Posted by - February 14, 2025 0
முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த வருடமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு…

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன்: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்

Posted by - July 6, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார்…

இந்த பட்ஜெட் பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் – முதல்வர் புகழாரம்

Posted by - February 1, 2025 0
விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3. இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் – முதல்வர் ரங்கசாமி…

ஓணம் லாட்டரியால் அடித்தது அதிர்ஷ்டம்: திருப்பூரை சேர்ந்த 4 பேர் ரூ.25 கோடிக்கு அதிபதியானார்கள்

Posted by - September 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில்…

இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

Posted by - January 23, 2025 0
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன. செல்போன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *