Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சிக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று இறுதிச் சுற்று நடைபெற்றுள்ளது. இந்த இறுதி சுற்றில் திவ்யா கணேஷ், அரோரா, சபரி மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இதற்கிடையே, அவர்களில் யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதுப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். திரைத்துறை பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், நடிகைகள் மற்றும் சோஷியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் என கலவையாக இந்த சீசனில் நுழைந்தனர். ஆனால், இந்த சீசன் தொடங்கியது முதல் மக்கள் மத்தியில் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. மாறாக, இந்த சீசனில் எந்த கன்டென்ட்டும் இல்லை என்ற பேச்சுக்கள் எழுந்தன.இதற்கிடையே தான் வைல்டு கார்டு என்ட்ரி நடந்தது. அதுவும் குறைந்த நாட்களிலேயே வைல்டு கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பிய வரலாறும் இந்த சீசனில் தான் அரங்கேறியது. இந்த சீசனுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் குறைந்து வந்ததால் ஆட்டத்தை மாற்றும் வகையில் 4 போட்டியாளர்கள் புதிதாக உள்ளே அனுப்பப்பட்டனர். அதன்படி, பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தார்கள். ஆனால், அப்போதும் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போல் கூச்சலும் குழப்பமும் ஆகவே நிகழ்ச்சி தொடர்ந்தது.ஆனால், வோட்டிங் அடிப்படையில் வினோத் டாப்பில் இருந்த நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியேறினார். இதை தொடர்ந்து, அரோரா தான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வோட்டிங் அடிப்படையில் திவ்யா தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்தன. அதனால் அவர் தான் டைட்டிலை வெல்வார் என்று கணிக்கப்பட்டது.
- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்..
Related Post
உணவுக்கு முன், பின் டீ, காபி அருந்தலாமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விளக்கம்!
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில்,…
குருபெயர்ச்சி 2024…
விழுப்புரம் மாவட்ட அர்ச்சகர் பாஸ்கர் இந்த வருடம் குரு பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்கு சிறப்பு இருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார். இந்த வருடம் 2024 குரு பெயர்ச்சி…
புதுமாப்பிள்ளைகளுக்கு வெற்றிலையின் மகத்துவம் தெரியுமா?
வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது. இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை…
கடலை மாவு இருக்கா? அப்ப இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசை, பூரிக்கு செமயா இருக்கும்..
காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? எப்போதும் காலையில் இட்லி, தோசை சாப்பிடுவது சரி, அதற்காக சைடு டிஷ் கூட ஒரே மாதிரி…
சத்தான… சுவையான… குதிரைவாலி அடை தோசையை செய்வது எப்படின்னு தெரியுமா?
தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (288)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்

- “சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

- அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? – முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்

- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
