edapadi

Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?

106 0

அதிமுக-வில் தற்போது உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல்வேறு அரசியல் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. ஆளுங்கட்சியாக தவெக-வும், எதிர்க்கட்சியாக திமுக-வும் அமர்ந்துள்ள நிலையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அதிமுக-வில் பூகம்பமே வெடித்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக:

எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக சென்ற பிறகு, இதுவரை சந்தித்த அனைத்து பொதுத்தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிருப்தியை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக-வின் 47 எம்எல்ஏ-க்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கின்றனர். சசிகலா, தினகரனை விரைவில் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பறிபோகிறதா பொதுச்செயலாளர் பதவி?

விரைவில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகள் இருப்பதால் அவரது பொதுச்செயலாளர் பதவி தப்புமா? சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியிருப்பதால் புதிய பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவாரா? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்த சிவி சண்முகம் அதிமுக-வில் பிளவு ஏதும் ஏற்படவில்லை, எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச்செயலாளர் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தாலும், திமுக ஆதரவில் ஆட்சியமைக்க நினைத்த இவரெல்லாம் பொதுச்செயலாளரா? என்று கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

இனி வரும் நாட்களில் அதிமுக-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதியாகும். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி மாற்றப்பட்டால் கட்சியில் அவரது முக்கியத்துவம் மிகப்பெரிய அளவில் குறையும். தனக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் செயல்படுவதால் எடப்பாடி பழனிசாமி அதை எப்படி சமாளிக்கப்போகிறார்? என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பொதுச்செயலாளர் பதவியை தக்கவைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கட்சியின் மற்ற நிர்வாகிகளுடன் இணக்கமாக செயல்படுவாரா? சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் சேர ஒப்புக்கொள்வாரா? சசிலகாவும், தினகரனும் கட்சியில் இணைவது என்றால் அவர்கள் தொடங்கிய கட்சியை கலைப்பார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. தற்பாேது மிகவும் நெருக்கடியான காலகட்டம் அதிமுக-வில்  ஏற்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது.

Related Post

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

உஷார்… டெங்கு காய்ச்சலின் இந்த 4 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..

Posted by - September 14, 2023 0
டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே…

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *