TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

55 0

அடிப்படை காவலர்களுக்கான பணி ஊதியம் ரூ.18,200ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார், அப்போது தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை விஜய் இன்று வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள அவிநாசி சந்திப்பில் மக்களை சந்தித்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து வருகை தந்த அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

100 சதவிகிதம் நம்பலாம்

இதனையடுத்து பேசிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே என தனது உரையை தொடங்கிய விஜய், ஏப்ரல் 16ம் தேதி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிடுகிறோம். இப்போது சில வாக்குறுதிகளை தெரிவிக்கிறேன் என சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள், சிறு குறு வணிகர்களுக்கான வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார். பின்னர் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நீங்கள் இந்த விஜயை 100 சதவிகிதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன். நன்றி கடன் செலுத்த வந்துள்ளேன். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன். அதனால் உங்களில் ஒருவனாக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இங்கு விசில் புரட்சி தேவை. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்” என தெரிவித்தார்.

காவலர்களுக்கான வாக்குறுதிகள்

  • காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18,200 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.
  • அதிக மன அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு மாதம் ரூ.1,000 பணிப் படியாகக் கூடுதலாக வழங்கப்படும்.
  • காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டம் இயற்றப்படும். இதன் மூலம் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும்.
  • அதிக வேலைச் சுமை கொண்ட காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு சுழற்சி முறை விடுமுறை உறுதி செய்யப்படும்.
  • காவலர்களுக்கான சலவைப் படியை ரூ.500 இலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.
  • மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் காவலர் நல மருத்துவமனைகள் நிறுவப்படும்.
  • பெண் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நெறிமுறை அல்லது பாதுகாப்புப் பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள்.
  • பெண் காவல்துறை பணியாளர்களுக்கு தனி ஓய்வறைகள் மற்றும் நடமாடும் டாய்லெட் யூனிட்டுகள் அமைக்கப்படும்.

Related Post

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ – டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு

Posted by - July 23, 2025 0
டெல்டா மாவட்டங்கள் இனி திமுகவின் கோட்டை அல்ல, அந்த கோட்டை எல்லாம் தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டதாக தஞ்சையில் பேசிய எடப்பாடி பழனிசாமி விமர்சனம். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை…

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *