Tamil Nadu Government Formation: விஜய்க்கு ஆதரவு தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-ம் விசிகவும் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கு, இடதுசாரிகளும் ஆதரவு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவுக்கு ஆட்சி?
சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்து நிலையில் மூலம் தவெகவின் பலம் 112 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் 108 இடங்களை கைப்பற்றியதன் அடிப்படையில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய். 118 MLA-க்களின் ஆதரவை காட்டிவிட்டு ஆட்சியமைக்குமாறு ஆளுநர் மாளிகை முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆனால் ஆட்சியமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதால் விஜயை பதவியேற்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது.
கடிதத்தில் சொதப்பியதவெக
ஆனால் விஜய் தரப்பில் இருந்து ஒரு தவறு செய்துவிட்டதாக தகவல் வெளியானது. விஜய் ஆளுநரிடம் எழுதிய கடிதத்தில் 108 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் என சொல்லி விஜய் ஆட்சியமைக்க கேட்டிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் MLA-க்களின் ஆதரவையும் சேர்த்து கடிதம் கொடுத்ததால் கூட்டணி ஆட்சி என்று வரும் போது 118 எம்.எல்.ஏக்களை ஆளுநர் தரப்பு கேட்டதாக பேசப்பட்டது.
#WATCH | Tamil Nadu: TVK Joint General Secretary CTR Nirmal Kumar arrives at Balan Illam, CPI Headquarters in Chennai. pic.twitter.com/EfFdzK6zbd
— ANI (@ANI) May 8, 2026
ஆட்சியமைக்க ஆதரவு
இந்த நிலையில் தான் விஜய்க்கு ஆதரவு தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-ம் விசிகவும் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் விஜய்க்கு ஆட்சியமைப்பதற்கு தேவைப்பட்ட 6 MLA-க்கள் கிடைத்துவிட்டனர். இதனைதொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் விஜய். ஆளுநர் அழைப்பு விடுத்தால் விஜய் நாளை அல்லது நாளை மறுநாள் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.