tvk vijay

Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

70 0

தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், விசிக நாளை ஆதரவு கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் தமிழ்நாட்டில் முதன்முதலாக தொங்கு சட்டசபை உருவாகிறது.

தமிழ்நாட்டில் முதன்முதலாக 2026-ல் களமிறங்கி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக. எனினும் ஆட்சியமைக்கத் தேவைப்படும் 118 தொகுதிகள் இல்லாததால், சிறிய கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க உள்ளது. தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், விசிக நாளை ஆதரவு கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் தமிழ்நாட்டில் முதன்முதலாக தொங்கு சட்டசபை உருவாகிறது.

தொங்கு சட்டசபை என்றால் என்ன?

ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகமான) இடங்கள் கிடைக்காத நிலையில், பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடிப்பதே தொங்கு சட்டசபை ஆகும்.

தமிழ்நாடு அரசியலில் இதுநாள் வரை தொங்கு சட்டப்பேரவை உருவானதில்லை. முன்னதாக தமிழ்நாடு மாநிலம் உருவாகும் முன், மெட்ராஸ் மாகாணத்தில் தொங்கு சட்டப்பேரவை என்ற நிலை ஏற்பட்டது. குறிப்பாக 1952-ல் நடந்த தேர்தலில், சட்டப்பேரவைக்கு 375 தொகுதிகள் இருந்தன. அப்போது பெரும்பான்மைக்கு 188 உறுப்பினர்கள் தேவைப்பட்டது. எனினும் காங்கிரஸ் 152 இடங்களில் மட்டுமே வென்றதால், தொங்கு சட்டமன்றம் உருவானது. காமன் வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி ஆகிய சிறு கட்சிகளின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

2006-ல் நடந்தது என்ன?

2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனியாக 96 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. எனினும் திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் கட்சிகள் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமக) வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுகவை மைனாரிட்டி அரசு என்று விமர்சித்ததும் திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதி, மைனாரிட்டிகளுக்கான அரசு என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் தொங்கு சட்டமன்றம்

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் தேவை. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக 13 இடங்களையும் எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரஸ் 17 இடங்களையும் பெற்றது.

காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக சிறிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் பாஜக, தொங்கு சட்டமன்றத்தை உருவாக்கி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி

2019 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. அங்கு, 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க 145 தொகுதிகள் தேவை. பாஜக 105 இடங்களைப் பெற நிலையில், சிவசேனா 56 இடங்களைப் பெற்றிருந்தது. பாஜகவை ஆளுநர் முதலில் அழைத்த நிலையில், அவர்களால் பெரும்பான்மையைக் காட்ட முடியவில்லை. தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்தன. இது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக இருந்தது.

தொங்கு சட்டசபையால் என்ன சாதகம், பாதகம்?

தமிழ்நாட்டில் முதல்முறையாக தொங்கு சட்டமன்றம் உருவாகி உள்ள நிலையில் கீழே உள்ள பிரச்சினைகள் ஏற்படலாம்.

கூட்டணி பேரம்

ஆட்சி அமைப்பதற்காக கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டணி பேரங்கள் அதிகரிக்கும்.

நிர்வாகத்தில் சிக்கல்

நிலையான ஆட்சி அமையும் வரை, அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம்.

மறு தேர்தல் சூழல்

தொங்கு சட்டமன்றத்துக்கு ஆதரவு அளித்த கட்சிகள், ஒருவேளை தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம்.

Related Post

அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம்: தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார்…

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

கும்பகோணம் சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?

Posted by - October 8, 2025 0
சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?  சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

Posted by - January 10, 2025 0
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை…

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - June 9, 2023 0
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *