அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு செமயா இருக்கும்…

284 0

இன்று கிறிஸ்துமஸ் என்பதால், அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டருக்கும். இப்படி விடுமுறை நாட்கள் வரும் போது தான் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து நீண்ட நேரம் நிம்மதியாக சாப்பிடலாம்.

நீங்கள் கிறிஸ்துமல் அன்று காலை பூரி, சப்பாத்தி செய்யப் பேகிறீர்களானால், அதற்கு என்ன ஸ்பெஷலாக சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு இப்படி தவா மசாலாவை செய்யுங்கள்.

உங்களுக்கு தவா பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே தவா பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு  செமயா இருக்கும்... | Simple And Tasty Tawa Paneer Masala Recipe - Tamil  BoldSky

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (அரைத்தது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

ஊற வைப்பதற்கு….

* கெட்டி தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கசூரி மெத்தி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் ஊற வைக்க வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, கரம் மசாலாவைத் தூவி, மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் வெண்ணெயை சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தவா பன்னீர் தயார்.

Related Post

எல்லை மீறி வார்த்தை விடும் போட்டியாளர்களும், ஏமாற்றிய விஜய் சேதுபதியும் | Bigg Boss Tamil 9

Posted by - October 29, 2025 0
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் நடந்த எல்லை மீறல்கள் அளவுக்கு எந்த சீசனிலும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக போட்டியாளர்கள் மாறி மாறி வசவுகளால்…

பெரிய உசுரு போக போகுது.. சக்திக்கு என்னாச்சு? எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

Posted by - November 13, 2025 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய உண்மை பெண்கள் எல்லோருக்கும் தெரியவந்துவிட்ட நிலையில் கதை இனி எப்படி நகர போகிறது என ரசிகர்கள்…

சன் டிவியின் புது சீரியல்.. ஹீரோவாகும் வில்லன் நடிகர்! இவர்தான்

Posted by - March 12, 2025 0
டிவி சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்டுத்தி வருகின்றன. அந்த வரிசையில் சன் டிவியில் செல்லமே என்ற புது சீரியல் வர இருக்கிறது. ஹீரோ சுந்தரி சீரியலில்…

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

Posted by - December 30, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே…

சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்… நெய்க்காரப்பட்டி ஸ்டைல் தயிர் குருமா

Posted by - September 2, 2023 0
இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு இதுவரை வீட்டில் செய்யாத ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் நெய்க்காரப்பட்டி ஸ்டைல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *