அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு செமயா இருக்கும்…

282 0

இன்று கிறிஸ்துமஸ் என்பதால், அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டருக்கும். இப்படி விடுமுறை நாட்கள் வரும் போது தான் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து நீண்ட நேரம் நிம்மதியாக சாப்பிடலாம்.

நீங்கள் கிறிஸ்துமல் அன்று காலை பூரி, சப்பாத்தி செய்யப் பேகிறீர்களானால், அதற்கு என்ன ஸ்பெஷலாக சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு இப்படி தவா மசாலாவை செய்யுங்கள்.

உங்களுக்கு தவா பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே தவா பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு  செமயா இருக்கும்... | Simple And Tasty Tawa Paneer Masala Recipe - Tamil  BoldSky

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (அரைத்தது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

ஊற வைப்பதற்கு….

* கெட்டி தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கசூரி மெத்தி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் ஊற வைக்க வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, கரம் மசாலாவைத் தூவி, மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் வெண்ணெயை சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தவா பன்னீர் தயார்.

Related Post

சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!

Posted by - February 24, 2023 0
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாத ஒரு இடத்தை பெற்று இருக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. காய்ச்சல்,சளி,…

தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே?

Posted by - February 14, 2023 0
பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் சென்னையில் தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.…

உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் வெங்காய தோசை

Posted by - March 11, 2023 0
ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும். தேவையான பொருள்கள் : ஓட்ஸ் – 3 கப் அரிசி மாவு –…

Top 10 தமிழ் சீரியல்கள் – TRP ரேட்டிங் (2025)

Posted by - December 27, 2025 0
வெள்ளித்திரைக்கு இணையாக தமிழக மக்கள் மத்தியில் சின்னத்திரைக்கும் இடம் உண்டு. இதில் சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி…

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ

Posted by - October 15, 2025 0
வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *