அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு செமயா இருக்கும்…

299 0

இன்று கிறிஸ்துமஸ் என்பதால், அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டருக்கும். இப்படி விடுமுறை நாட்கள் வரும் போது தான் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து நீண்ட நேரம் நிம்மதியாக சாப்பிடலாம்.

நீங்கள் கிறிஸ்துமல் அன்று காலை பூரி, சப்பாத்தி செய்யப் பேகிறீர்களானால், அதற்கு என்ன ஸ்பெஷலாக சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு இப்படி தவா மசாலாவை செய்யுங்கள்.

உங்களுக்கு தவா பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே தவா பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு  செமயா இருக்கும்... | Simple And Tasty Tawa Paneer Masala Recipe - Tamil  BoldSky

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (அரைத்தது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

ஊற வைப்பதற்கு….

* கெட்டி தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கசூரி மெத்தி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் ஊற வைக்க வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, கரம் மசாலாவைத் தூவி, மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் வெண்ணெயை சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தவா பன்னீர் தயார்.

Related Post

சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்.. நிற்கதியான ஆனந்தி, காப்பாற்ற போகும் அந்த நபர்

Posted by - March 13, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.அன்பு மகேசை…

செல்டவருக்கு ரூ.7500 கோடி நிலுவைத்தொகை… வங்கிகளில் கடன் கேட்டு அலையும் Vi நிறுவனம்!

Posted by - January 7, 2023 0
அறிக்கையின்படி, Vi நிறுவனம்  Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi ,…

இந்த 5 உணவுகளோட எலுமிச்சையை நீங்க சேர்த்து சாப்பிடவே கூடாதாம்… அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?

Posted by - September 23, 2023 0
மிகவும் பிரபலமான உணவு பொருட்களில் எலுமிச்சையும் ஒன்று. இது உங்கள் ஆரோக்கியத்திற்க்கு பல நன்மைகளை வழங்குவது முதல் சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பிலும் பல அதிசயங்களை செய்கிறது.…

வெயிலுக்கு இதம் தரும் வெள்ளரிக்காய் மில்க் ஷேக்.. டிரை பண்ணி பாருங்க..!

Posted by - March 11, 2023 0
வெள்ளரி உடல் எடையை குறைக்க உதவும் என தெரியும். ஆனால், சிறுநீரக கல்லை கரைக்க இது உதவும் என உங்களுக்கு தெரியுமா?. சிறுநீரக கற்களை கரைக்க உதவும்…

நாய்கள் இடதுபுறம் வாலாட்டினால்.. கொலைவெறியாம்!

Posted by - January 19, 2024 0
நாய்கள் நம்மைப் பார்த்து வாலாட்டி னால் அதை அன்பின் வெளிப்பாடாகத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்துவிடாதீர்கள். நாய்கள் வாலாட்டுவதிலும் ஒரு சூட்சுமம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *