“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

144 0

புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு யாராவது போன் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தமிழகத்தை போல் புதுவையிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த எஸ்ஐஆர் படிவங்களை பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள். அதில் யாருக்காவது பூர்த்தி செய்ய தெரியாவிட்டால் அதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று பூர்த்தி செய்து கொடுத்து விடலாம். இந்த படிவத்தில் பூர்த்தி செய்து அதிகாரிகள் சரிபார்த்தபிறகுதான் ஒவ்வொருவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிலையில் சிலருக்கு எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக பேசுவதாக கூறி ஓடிபி எண்களை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு யார் ஓடிபி கேட்டாலும் கொடுக்க வேண்டாம். “எங்களுடைய வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) சென்று பூர்த்திச் செய்து கொள்கிறோம்” என கூறி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர், அவரின் தொலைப் பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இது போல் யாராவது போன் செய்தால் பிஎல்ஓ அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். 0413 – 2276144, 94892 05246 மற்றும் ஆகிய இலவச எண்களிலும், ‘cybercell-police@py.gov.in’ மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க ‘www.cybercrime.gov.in’ ஐ பயன்படுத்தவும் என தெரிவித்துள்ளனர்.

Related Post

“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படுவது மன்னிப்பே அல்ல” – கவுரி கிஷன்

Posted by - November 11, 2025 0
பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று…

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

Posted by - September 7, 2023 0
திருமங்கலம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை…

உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி – ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”

Posted by - May 26, 2025 0
டெல்லிக்கு போனதாக புலம்பியது போதும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கதறுவதை தமிழ்நாடே ரசிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *