கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

144 0

பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளில் தான் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா, அவரது மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைமையாக வந்தார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை, கட்சிக்குள் ஏற்பட்ட நிகழ்வு போன்றவை காரணமாக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 5 ஆண்டுகாலம் பொறுமையாக இருந்த அவர், தற்போது கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். பெயர் அறிவிக்கப்படாத நிலையில், கொடி மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சசிகலாவிடம், “நீங்கள் அரசு ஊழியர் கிடையாது.  ஆனால் மிகப்பெரிய அளவில் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள். ஜெயலலிதாவோடு இருந்த தொடர்பை பயன்படுத்தி இன்றளவும் செல்வாக்கான வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?”என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ இது திட்டம் போட்டு வெளியில் இருந்து பரப்பப்படும் விஷயமாகும். ஜெயலலிதா 1991-1996ம் ஆண்டு காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்தார். அப்போது ரூ.1 சம்பளம் பெறுவேன் என கூறியதையே கொச்சைப்படுத்தினார்கள். 1 ரூபாய் வாங்கி என்ன பண்ணுவாங்க என தெரிவித்தார்கள். நாங்கள் ஜெயலலிதா முதலமைச்சராவதற்கு முன்னால் சில நிறுவனங்களை நடத்தி வந்தோம். அதில் வரும் வருமானத்தை வைத்து செலவு செய்து வந்தோம்.

அப்போது திமுக அரசு 13 வழக்குகள் போட்டது. அதற்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என இரண்டுக்கும் வழக்கு நடத்த பணம் செலவழிக்க வேண்டும். இதற்கான பணம் எங்கள் நிறுவனங்களில் இருந்து தான் சென்றது. வருமான வரித்துறை தாக்கலில் எதற்கெல்லாம் நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியும். நான் ஒரு அரசு ஊழியர் கிடையாது. தனிப்பட்ட நபர். நான் ஒரு நிறுவனத்தை நடத்தக்கூடாது என எப்படி சொல்ல முடியும்?. இன்றைக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தனியாக தொழில் செய்யவில்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்.

பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை இந்த வழக்கில் இணைத்து விட்டார். ஒரு அரசு ஊழியர் ஊழல் செய்து விட்டார் என வழக்கு தொடர்ந்தால் அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் சிக்க வைக்கப்படலாமா?, குடும்ப உறுப்பினர்களால் தனியாக சம்பாதிக்க முடியாதா?

நான் நடத்திய நிறுவனங்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வரவு -செலவுகளை மேற்கொண்டோம். யாருக்கும் இப்படி வழக்கு போடவில்லை. இவை அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்டவை. சசிகலா உடன் இருப்பதால் தான் இவ்வளவு சிக்கல். இல்லாவிட்டால் திமுக தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்திருக்கலாம் என கருணாநிதி நினைத்தார்” என சசிகலா கூறியுள்ளார்.

Related Post

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - March 20, 2026 0
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள…

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - November 20, 2025 0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து…

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - March 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *