ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

141 0

அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அதிகார மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்பொழுது வரை உறுதியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிகார மோதல் உச்சத்தை தொட்டது. தலைமை இடத்தை பறிக்க போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக பல பிளவுகளாக அதிமுக நிர்வாகிகள் பிரிந்து தனி, தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.  ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என தனியாக பிரிந்து இருந்தாலும் மீண்டும் அதிமுகவில் இணைய முயற்சி செய்து வந்தனர். ஆனால் இந்த 3 பேரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார்.

கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், டிடிவி

இதன் காரணமாக ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக வாக்குகள் சிதறி தோல்விக்கு மேல் தோல்வி கிடைத்து வருகிறது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். இவர்களுக்கு எதிராக அதிமுக தனி அணியாக போட்டியிட்டது. ஆனால் வாக்குகள் சிதறி தோல்வி தான் கிடைந்தது.  எனவே 2026ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலாவது ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள். தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லையென புகார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதன் படி அதிமுக – பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்க்கு 3 இடங்களும், டிடிவி தினகரனுக்கு 5 இடங்களும் ஒதுக்க இபிஎஸ் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியானது.

இபிஎஸ் இருக்கும் வரை இணையமாட்டோம்

இந்த சூழ்நிலையில், இ.பி.எஸ். உள்ள வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் உறுதியாக தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்  என தெரிவித்த ஓபிஎஸ், அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவோம் என வைத்திலிங்கம் பேசியதை வழிமொழிவதாகவும் கூறினார். எந்த சூழலிலும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என நிர்வாகிகள் பேசியதையும் வழிமொழிவதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

யாருடன் கூட்டணி.?

முன்னதாக சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது

Option a தவெக

Option b திமுக

என இரு வாய்ப்புகளை கொடுத்து  மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Posted by - September 13, 2025 0
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

Posted by - September 16, 2025 0
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு…

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.!

Posted by - December 26, 2025 0
கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தால் பாமகவில் இருந்து மூத்த தலைவர் ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புணி அறிவித்துள்ளார். பாமகவில் உட்கட்சி மோதல் பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா… விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு

Posted by - September 8, 2025 0
விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *