குடந்தை:அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கு..அவதிபடும் பொது மக்கள்…

770 0

கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கபடும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடபடுகிறது.அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் மக்களை அலையவிட்டுவருவதாக அப்பகுதி மக்கள் புலம்பி தீர்த்து வருகின்றார்கள்.

இது சம்பந்தமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கையில் மனுவுடன் இருந்த பொதுமக்களில் சிலரை விசாரித்தபோது.

வட்டாட்சியர் துறை என்பது  மக்கள்‌ தங்கள்‌ அடிப்படை தேவைக்காக அதிகமாக புழங்கும்‌ ஒரு அலுவலகம்‌ ஆகும்‌.

Kumbakonam, Thanjavur : கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகம் முன் அதிமுக சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க ...

அங்கு மக்கள்‌ கண்ணியமுடன்‌ நடத்தப்பட வேண்டும்‌ என்பது அடிப்படை மனித உரிமைஆகும்‌. ஆனால்‌ அரசு அலுவலகங்களில்‌ இந்த அடிப்படை மனித உரிமை தொடர்ந்து மீறப்படுவது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது என்று கூறினர்.

நில அளவை செய்ய தாமதம் ; நில அளவையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

நில அளவை செய்ய தாமதம் செய்யும் நில அளவையர்கள் மீது ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அளிக்கும்  விண்ணப்பங்கள் மீது உரிய காலகெடுவிற்குள்  நில அளவை செய்யாமல் கால தாமதம் செய்து அலைகழிக்கப்படுவதாகவும், நில அளவை விண்ணப்பத்தின் வரிசை பட்டியல்படி அளவீடு பணி மேற்கொள்வதில்லை நில அளவை செய்த பின்னர் நில அளவை சான்று வழங்காமல் அலைக்கழிக்கபடுகின்றனர் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தினந்தோறும் பல பேர் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு தங்கள் இடத்தை அளக்க கட்டணம் செலுத்தி பல வருடங்களாக காத்திருப்பதாகவும் தினந்தோறும் அலைக்கழிக்கபடுவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.தனி மனித உரிமையை மதிக்காமல் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தாலும் எவ்வித முன்னேற்றமும் நடவடிக்கையும் தங்கள் மனு மீது எடுக்கபடாமல் கிடப்பில் போடபடுவதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட அளவில் நில அளவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகிறதா ? மேலும் அந்தந்த வட்டாட்சியர்கள் நில அளவை விண்ணப்பங்கள்  நிலை குறித்து ஆய்வு மேற்ககொள்ளப்படுகிறதா ? என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் இது போன்ற நில அளவையர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

இது சம்பந்தமாக மக்கள் எவ்வித நடவடிக்கை எடுத்து தங்கள் உரிமையை நிலைநாட்டலாம் என்று பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர்                                        திரு R.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கேட்ட போது அவர் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய தவறுவது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடி சட்டபடி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து  மக்கள் தங்கள் உரிமையை பெற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்து மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடும் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Related Post

நீண்ட உறக்கத்திலிருந்து முதல்வர் எப்போது விழிப்பார்..? – அண்ணாமலை விமர்சனம்..!!

Posted by - May 25, 2024 0
நீண்ட உறக்கத்திலிருந்து தமிழக முதல்வர் எப்போது விழிப்பார் ? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!!

Posted by - March 5, 2024 0
தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்டோர் தெருவே செய்யப்பட்டு அவர்களுக்கு…

கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க

Posted by - December 8, 2023 0
சென்னை: கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால்…

முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் தர்ணா போராட்டம் – மயிலாடுதுறையில் பரபரப்பு…!

Posted by - July 16, 2025 0
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ போது மனு கொடுக்க காவல்துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்த நிலையில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி… ஓபிஎஸ் அறிவிப்பு

Posted by - January 21, 2023 0
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *