கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க

381 0

சென்னை:

கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா?

பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கர்ப்பம் கலைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கை உள்ளது.. இந்த பழங்களால் உடல் சூடு அதிகரிக்குமே தவிர, கர்ப்பம் கலையும் என்பதற்கான எந்தவிதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லையாம்.. எனவே, அளவாக பப்பாளி, அன்னாசிப் பழங்களை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத  கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க | Do you know Amazing Uses of Curry Leaves and  What are the ...

பொதுவாகவே கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. இதுபோன்ற நேரங்களில் கோதுமை மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து மிகுந்த முருங்கைக்கீரை, முள்ளங்கியை தவறாமல் எடுத்து கொள்ளலாம்.. அதனால்தான், முருங்கைக் கீரையும், பாசிப் பருப்பு கலந்த பொரியலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு தருவார்கள்..

கர்ப்பிணிகள்:

அதேபோல, கர்ப்பிணிகள் தினமும் உணவில் கீரையை கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும்.. காரணம், கீரைகளில் வைட்டமின்கள், தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.. அந்தவகையில், பொன்னாங்கண்ணி, புள்ளிச்சரை கீரை, மணத்தக்காளி கீரை போன்றவற்றில் இரும்பு சத்துக்கள் உள்னன.. அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்றவை தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். பசலிக்கரை, ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியவை.. கொத்தமல்லியும், தூதுவளையும், சுவாசம் மற்றும் சளி பிரச்சனைகளை சரி செய்யவும் உதவக்கூடியவை.
முளைக்கீரை:
இதைத்தவிர, பசலிக்கீரை, முளைக்கீரை போன்றவை சிறுநீர்பாதை பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்.. வல்லாரை கீரை சிறந்த நினைவாற்றலை தரக்கூடியவை.. புதினா கீரைகள், கர்ப்ப நேரத்தில் ஏற்படக்கூடிய மயக்கத்தையும் தடுத்து நிறுத்தக்கூடியவை. அந்தவகையில், எந்த கீரைகளையுமே தவிர்க்கக்கூடாது. இதில், முக்கியமானது கறிவேப்பிலை.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..
கறிவேப்பிலை:
இந்த கறிவேப்பிலை இலையை, நிழலில் உலரவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.. தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவும் பலன்தரும். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை..

Related Post

இரவு நேரத்துல நெஞ்செரிச்சல் ரொம்ப தொல்லை பண்ணுதா? இப்படி பண்ணுங்க அந்த பிரச்சினையே வராது…!

Posted by - December 21, 2023 0
ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) என்றும் அழைக்கப்படும் இரவுநேர நெஞ்செரிச்சல், அசௌகரியமாகவும் தூக்கத்தை சீர்குலைக்கும். பொதுவாக நெஞ்செரிச்சல் அதிக அமில உணவுகளை சாப்பிட்ட…

ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 2வது நாளாக ஐடி ரெய்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி, சிப்காட் பகுதிகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

சோனியின் புதிய தமிழ் அலைவரிசை!

Posted by - February 9, 2026 0
சோனி நிறுவனம் தனது புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப சில வித்தியாசமான முயற்சிகளுடன் தொடர்ந்து…

போராடும் ஆசிரியர்கள் மீது **ஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!

Posted by - January 13, 2026 0
எக்மோர் ரயில் நிலையம் முன்பு என்னைப் பின்தொடர்ந்து கிட்டத்தட்ட 25 காவலர்கள் மற்றும் 4 சீருடை இல்லாத காவல் துறையினர், என்னைச் சுற்றி வளைத்தனர். சம வேலைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *