கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

237 0

திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின் கதவை உடைத்து கத்திமுனையில் கொள்ளையடிக் கிறார்கள்

சமீபகாலமாக, குற்றச் செயல்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழகம் தழுவிய அளவில் 15 பேர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, ஒரே நாள் இரவில் சென்னையில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஈரோடு அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதி கொல்லப்பட்டதில் தொடங்கி, திருமழிசையில் ரெளடி எபினேசர் கொல்லப்பட்டது வரை, எங்கு பார்த்தாலும் ரத்தக்கறையாகக் காட்சியளிக்கிறது தமிழகம். ரெளடிகளுக்குள் நடக்கும் ‘கேங் வாரில்’ நாட்டு வெடிகுண்டுகள் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்திருக்கிறது. வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் எந்தவித அச்சமும் இல்லாமல் ஈடுபட்டுவருகிறார்கள் குற்றவாளிகள்.

சிவகங்கை மாவட்டம், வீரவலசை கிராமம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளைக் காட்டி மிரட்டி நடத்துனரிடம் இருந்த பணப்பையைப் பறித்துச் சென்றிருக்கிறார்கள். பணியின்போது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் போக்குவரத்துத்துறை ஊழியர்கள். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறை மார்தட்டிக்கொள்கிறது. ஆனால், நடக்கும் சம்பவங்கள் எல்லாமே, ‘குற்றம் செய்பவர்களுக்குக் காவல்துறைமீது துளியும் அச்சம் இல்லை’ என்பதையே உணர்த்துகின்றன. “என்னாச்சு சட்டம்-ஒழுங்கு… என்ன செய்கிறது காவல்துறை?” என்று கேட்கிறார்கள் மக்கள்.

Related Post

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

Posted by - December 29, 2023 0
தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு…

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ

Posted by - December 7, 2023 0
மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது சென்றுவிட்டது. புயல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் அந்த தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு…

குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!

Posted by - March 7, 2025 0
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். தவெக சார்பில்…

பூலாங்கிழங்கின் மகிமை.. கமகம பூலாங்கிழங்கு பொடி எப்படி செய்யணும் தெரியுமா? வேற லெவல் வெள்ளை மஞ்சள்

Posted by - January 6, 2024 0
சென்னை: கிச்சிலி கிழங்கு அல்லது பூலாங்கிழங்கு அல்லது வெள்ளை மஞ்சள் அல்லது அம்பா மஞ்சள் என்று பல்வேறு பெயர்களை கொண்ட இந்த மூலிகையின் பயன்கள் என்னென்ன தெரியுமா?…

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

Posted by - November 4, 2025 0
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *