தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

244 0

தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் கேயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு  | Vijayakanth body kept in island ground for public tribute tomorrow: DMDK  - hindutamil.in

அங்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் கூடியாதால் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி தேமுதிக தலைமையகத்தில் இருந்து அவரது உடல் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடியிருந்து அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 6 மணியளவில் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டு, விஜயகாந்த் உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெறும். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இறுதி ஊர்வலம் தேமுதிக தலைமையகம் சென்றடைந்து, அங்கு மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Related Post

திட்டமிட்ட தேதியில் முதுகலை ஆசிரியர் தேர்வு? டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - October 7, 2025 0
TN TRB Hall Ticket 2025 தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு குறித்த குறைகள் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு…

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல், கதறி அழுத பிரேமலதா.. புகைப்படங்கள் இதோ

Posted by - December 28, 2023 0
விஜயகாந்த் மரணம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் பாதிக்கப்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவமனையில் மரணமடைந்த நடிகர்…

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

Posted by - May 2, 2024 0
குக் வித் கோமாளி 5 தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இருந்து…

சிப்காட் தொழிற்சாலையில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்படும் ஆலை கழிவுகளால் 10 கி.மீ. சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிப்பு

Posted by - July 8, 2023 0
பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 2700 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *