சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

162 0

சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம் நாடு முழு​வதும் நேற்று நடந்​தது. தமிழக பாஜக சார்​பில் சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் அரு​கில் நடை​பெற்ற விழாவுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தலைமை வகித்​தார்.

மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன், செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்பட பாஜக நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இந்​நிகழ்ச்​சி​யில், பிரதமர் மோடி​யின் ‘சுய​சார்பு இந்​தி​யா’வை வலி​யுறுத்​தும் வித​மாக சுதேசி உறு​தி​மொழியை ஏற்​றுக்​ கொண்​டனர். பின்​னர், அனை​வரும் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தொடர்ந்​து, பொது​மக்​களுக்கு தமிழிசை சவுந்​தர​ராஜன் இனிப்பு வழங்​கி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுதேசி உறு​தி​மொழியை எடுத்​ததன் மூலம், அந்​நிய பொருட்​களை தவிர்த்​து, சுதேசி பொருட்​களைப் பயன்​படுத்த போகிறோம்.மேலும், சுதேசி செயலியை பயன்​படுத்த போகிறோம். அதாவது, அனை​வரும் பயன்​படுத்​தும், வாட்​ஸ்​அப் இப்​போது ‘அரட்​டை’​ யாக மாறிக் கொண்​டிருக்​கிறது. ‘விதேசி’களை விடுத்து ‘சுதேசி’ களை ஆதரிக்​கும் இயக்​கங்​களாக அனைத்து இயக்​கங்​களும் மாற வேண்​டும். அது​தான் பிரதமரின் நோக்​கம். நேரு, மன்​மோகன் சிங், நரசிம்​ம​ராவ் காலத்​தி​லும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் நடத்​தப்​பட்டுள்ளது. ஆனால், மோடி காலத்​தில் நடத்​தி​னால் மட்​டும், போராட்​டம் நடத்த போகிறோம் என இண்​டியா கூட்​ட​ணி​யினர் தெரி​வித்​துள்​ளனர்.2 ஆண்​டு​களாக கஷ்டப்​பட்டு சேர்த்த பொய் வாக்​காளர்​கள் அனை​வரும் போய் விடு​வார்​கள் என்ற கவலை திமுக​வுக்கு ஏற்​பட்டு விட்​ட​தா?ஜனநாயகத்தை காக்க எதை வேண்​டு​மா​னாலும் செய்ய வேண்​டும் என சொல்​லும் ஸ்டா​லின், முதலில் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தத்தை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். கோவை முழு​வதும் ஓலக்​குரல் ஒலித்து கொண்​டிருக்​கிறது. திமுகவை சார்ந்​தவர்​களால்​தான் திமுக அழியப்​போகிறது. இல்​லை​யென்​றால், மக்​களால் திமுக அழி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Related Post

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Posted by - October 8, 2025 0
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா…

சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்

Posted by - August 20, 2025 0
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இத்தனை கால அரசியல் அனுபவங்களை வைத்து, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சைலென்ட்டாக, அதே நேரத்தில் பக்காவாக செய்து…

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *