சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

161 0

சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம் நாடு முழு​வதும் நேற்று நடந்​தது. தமிழக பாஜக சார்​பில் சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் அரு​கில் நடை​பெற்ற விழாவுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தலைமை வகித்​தார்.

மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன், செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்பட பாஜக நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இந்​நிகழ்ச்​சி​யில், பிரதமர் மோடி​யின் ‘சுய​சார்பு இந்​தி​யா’வை வலி​யுறுத்​தும் வித​மாக சுதேசி உறு​தி​மொழியை ஏற்​றுக்​ கொண்​டனர். பின்​னர், அனை​வரும் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தொடர்ந்​து, பொது​மக்​களுக்கு தமிழிசை சவுந்​தர​ராஜன் இனிப்பு வழங்​கி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுதேசி உறு​தி​மொழியை எடுத்​ததன் மூலம், அந்​நிய பொருட்​களை தவிர்த்​து, சுதேசி பொருட்​களைப் பயன்​படுத்த போகிறோம்.மேலும், சுதேசி செயலியை பயன்​படுத்த போகிறோம். அதாவது, அனை​வரும் பயன்​படுத்​தும், வாட்​ஸ்​அப் இப்​போது ‘அரட்​டை’​ யாக மாறிக் கொண்​டிருக்​கிறது. ‘விதேசி’களை விடுத்து ‘சுதேசி’ களை ஆதரிக்​கும் இயக்​கங்​களாக அனைத்து இயக்​கங்​களும் மாற வேண்​டும். அது​தான் பிரதமரின் நோக்​கம். நேரு, மன்​மோகன் சிங், நரசிம்​ம​ராவ் காலத்​தி​லும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் நடத்​தப்​பட்டுள்ளது. ஆனால், மோடி காலத்​தில் நடத்​தி​னால் மட்​டும், போராட்​டம் நடத்த போகிறோம் என இண்​டியா கூட்​ட​ணி​யினர் தெரி​வித்​துள்​ளனர்.2 ஆண்​டு​களாக கஷ்டப்​பட்டு சேர்த்த பொய் வாக்​காளர்​கள் அனை​வரும் போய் விடு​வார்​கள் என்ற கவலை திமுக​வுக்கு ஏற்​பட்டு விட்​ட​தா?ஜனநாயகத்தை காக்க எதை வேண்​டு​மா​னாலும் செய்ய வேண்​டும் என சொல்​லும் ஸ்டா​லின், முதலில் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தத்தை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். கோவை முழு​வதும் ஓலக்​குரல் ஒலித்து கொண்​டிருக்​கிறது. திமுகவை சார்ந்​தவர்​களால்​தான் திமுக அழியப்​போகிறது. இல்​லை​யென்​றால், மக்​களால் திமுக அழி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Related Post

அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! – கதறும் பாஜக

Posted by - December 13, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை…

ஈபிஎஸ் உடன் தங்கமணி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்

Posted by - August 25, 2025 0
முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிருப்தி காரணமாக திமுகவில் இணையவுள்ளார் என்று தகவல் சர்ச்சை கிளம்பியிருந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன்  சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டார் அதிமுக…

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - September 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…

விசிகவை ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக.. ”முட்டு கொடுப்பதை நிறுத்திட்டு கட்சியை காப்பத்துங்க பாஸ்”

Posted by - September 22, 2025 0
 திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த விசிக எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *