Generated Image November 08 2025 10 15AM

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

184 0

சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம் நாடு முழு​வதும் நேற்று நடந்​தது. தமிழக பாஜக சார்​பில் சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் அரு​கில் நடை​பெற்ற விழாவுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தலைமை வகித்​தார்.

மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன், செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்பட பாஜக நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இந்​நிகழ்ச்​சி​யில், பிரதமர் மோடி​யின் ‘சுய​சார்பு இந்​தி​யா’வை வலி​யுறுத்​தும் வித​மாக சுதேசி உறு​தி​மொழியை ஏற்​றுக்​ கொண்​டனர். பின்​னர், அனை​வரும் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தொடர்ந்​து, பொது​மக்​களுக்கு தமிழிசை சவுந்​தர​ராஜன் இனிப்பு வழங்​கி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுதேசி உறு​தி​மொழியை எடுத்​ததன் மூலம், அந்​நிய பொருட்​களை தவிர்த்​து, சுதேசி பொருட்​களைப் பயன்​படுத்த போகிறோம்.மேலும், சுதேசி செயலியை பயன்​படுத்த போகிறோம். அதாவது, அனை​வரும் பயன்​படுத்​தும், வாட்​ஸ்​அப் இப்​போது ‘அரட்​டை’​ யாக மாறிக் கொண்​டிருக்​கிறது. ‘விதேசி’களை விடுத்து ‘சுதேசி’ களை ஆதரிக்​கும் இயக்​கங்​களாக அனைத்து இயக்​கங்​களும் மாற வேண்​டும். அது​தான் பிரதமரின் நோக்​கம். நேரு, மன்​மோகன் சிங், நரசிம்​ம​ராவ் காலத்​தி​லும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் நடத்​தப்​பட்டுள்ளது. ஆனால், மோடி காலத்​தில் நடத்​தி​னால் மட்​டும், போராட்​டம் நடத்த போகிறோம் என இண்​டியா கூட்​ட​ணி​யினர் தெரி​வித்​துள்​ளனர்.2 ஆண்​டு​களாக கஷ்டப்​பட்டு சேர்த்த பொய் வாக்​காளர்​கள் அனை​வரும் போய் விடு​வார்​கள் என்ற கவலை திமுக​வுக்கு ஏற்​பட்டு விட்​ட​தா?ஜனநாயகத்தை காக்க எதை வேண்​டு​மா​னாலும் செய்ய வேண்​டும் என சொல்​லும் ஸ்டா​லின், முதலில் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தத்தை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். கோவை முழு​வதும் ஓலக்​குரல் ஒலித்து கொண்​டிருக்​கிறது. திமுகவை சார்ந்​தவர்​களால்​தான் திமுக அழியப்​போகிறது. இல்​லை​யென்​றால், மக்​களால் திமுக அழி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Related Post

Gemini Generated Image slc13kslc13kslc1

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026 0
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து…

யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

Posted by - December 30, 2025 0
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும்…
vv e1773726199570

முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்…

Posted by - March 17, 2026 0
“பாஜக-வுடன் கூட்டணி பேசுகிறார் விஜய் என்ற செய்தியை திட்டமிட்டுப் பரப்புவதே திமுக தரப்பிடம் ‘ஊதியம்’ பெறும் யூ டியூப் சேனல்கள் தான். இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக…
fasdfr vv

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

Posted by - April 22, 2026 0
சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில்…
Gemini Generated Image gywpqbgywpqbgywp e1773396970165

பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன?

Posted by - March 13, 2026 0
திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். DMK Rajiv Gandhi: திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *