ஜெயலலிதா என்கிற ஆளுமையின் அழியாத நினைவுகள்…

153 0

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்தார் ஜெயலலிதா.

நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது நினைவலைகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

திரைத்துறையில் 1961இல் கன்னடத்தில் அறிமுகம் பெற்று பின்னர் 1965இல் ‘வெண்ணிறாடை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர் ஜெயலலிதா. ஒட்டுமொத்தமாக 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார். எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளராகவும் தீவிர பற்றாளராகவும் ஜெயலலிதா வலம் வந்தார்.

1980 இல் திரைத் துறையில் இருந்து விலகிய ஜெயலலிதா, பின்னர் 1982 ஆம் ஆண்டு, கடலூரில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 1983 ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

1987 இல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா – அதிமுக ஜானகி அணி என்று இரு அணிகளாகப் பிரிந்தது. 1989 இல், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முதல் முறையாகச் சென்றார். அவரது இந்த வெற்றி அதிமுகவை ஒன்றாக இணைத்தது.

பின்னர் 1991 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். பின்னர் மீண்டும் 2001 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் டான்சி வழக்கில் அவர் பதவி விலகினார்.

அப்போது முதலமைச்சராக முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர். 3 ஆவது முறையாக ஜெயலலிதா 2002 முதல் 2006 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

மீண்டும் 2011 இல் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழக்க நேரிட்டது. இதனால், மீண்டும் முதலமைச்சராக ஓபிஎஸ் பதவி ஏற்றிக் கொண்டார். பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். 2016 இல் எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவைத் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்து 6 ஆவது முறையாக முதலமைச்சரானார் ஜெயலலிதா. அந்த ஆண்டு அவர் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.அவரது ஆட்சிக் காலங்களில் தொட்டில் குழந்தை திட்டம், பெண்கள் காவல் நிலையங்கள், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், மகளிருக்கான இருசக்கர வாகன திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்த ஜெயலலிதா, 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சியை இழந்தார்.தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட பெரும் தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்த சந்தேகம்.. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்.. அதிமுகவில் பிளவு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது, தேர்தல் தோல்விகள் இவை எல்லாம் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது.

Related Post

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், குழந்தைகள் மாயம்… `பகீர்’ கிளப்பும் NCRB ரிப்போர்ட்!

Posted by - August 1, 2023 0
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை…

பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த டாக்டர்கள்- ஒரு வருடத்திற்கு பிறகு அகற்றம்

Posted by - April 19, 2023 0
திருப்பதி: மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள்…

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது

Posted by - October 8, 2025 0
சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்​வ​தேச பொருளா​தார…

புதிய ஜிஎஸ்டி வரியால் புது வீடு கட்டுவது சுலபம்.. சிமெண்ட் முதல் மார்பில் வரை! மொத்தமாக குறையும் விலை

Posted by - September 4, 2025 0
சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28% சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது…

157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை – அதிர்ச்சியளித்த 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Posted by - May 29, 2023 0
குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *