திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

222 0

திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் ஆங்காங்கே மேடை அமைத்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. சாலையில் திரண்டிருந்த பாஜகவினர் பிரதமரின் கார் கடந்தபோது மலர்தூவி வரவேற்பு நல்கினர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வந்த பிதமர் மோடி அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பிரதமர் உள்ளே வந்ததும், பதக்கம் பெறும் மாணவர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் பிரதமர், ஆளுநர், முதல்வர் அமர்ந்தனர். குழு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் அவர்களைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டம் பெற்ற மாணவர்களை நோக்கி “டெல்லிக்கு வர விருப்பமா?” என்று அவர் வினவினார். மாணவர்கள் உற்சாகமான குரலில் ஆமோதித்தனர்.

Related Post

மருத்துவ குணம் மிகுந்த நீலகிரி பூண்டுக்கு அமோக கிராக்கி: கிலோ ரூ.140-க்கு கொள்முதல்

Posted by - July 4, 2023 0
அரவேணு: கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூண்டுகளை பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவலம்.

Posted by - December 12, 2025 0
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிலவும் சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை…

அனைத்து வசதிகளும் தயார்… மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மேயர் கூறியது எதற்காக?

Posted by - May 5, 2025 0
வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு…

அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்…

Posted by - March 21, 2025 0
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த, ரூ.54,000 கோடி மதிப்பில் மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *