அனைத்து வசதிகளும் தயார்… மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மேயர் கூறியது எதற்காக?

171 0

வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும்.

தஞ்சாவூர்: ஆடி வரும் அழகே… தஞ்சை தேரின் அழகே அழகு என்பது போல் நாளை மறுநாள் தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேர்த்திருவிழா பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் தேர் அலங்கரிக்கும் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது.

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா  கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.

தஞ்சை மேலவீதியில் இருந்து தேர் நிறுத்தும் இடத்தில் தற்போது தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாளை மறுநாள் தேர் புறப்பாடு நடக்கிறது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். இந்த தேரின் சாதாரண உயரம் 19 அடி ஆகும். அகலம் 18 அடியாகும். தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும். அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும். இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன.

இந்நிலையில் நாளை மறுநாள் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் கொண்டு கட்டப்பட்டு வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேரின் முன்பகுதியில் குதிரை பொம்மைகள் வைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக தேர் சுத்தப்படுத்தப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அனைத்து பணிகளும் முடிந்து தேரோட்டத்துக்கு தேர் தயாராகி விடும். இந்நிலையில் இன்று மதியம் தேர் அழகுப்படுத்தப்படும் பணிகளை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேவையான இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர் செல்லும் நான்கு ராஜவீதிகளிலும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நின்று பார்ப்பதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடமாடும் (வேன்) கண்காணிப்பு கேமரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி தேர் திருவிழா சிறப்பாக நடக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Related Post

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

தமிழக முதலமைச்சரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்… மதுரையில் திடீர் பரபரப்பு

Posted by - April 30, 2024 0
கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். தமிழ்நாடு…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவலம்.

Posted by - December 12, 2025 0
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிலவும் சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

Posted by - May 29, 2025 0
பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *