அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்…

190 0

இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த, ரூ.54,000 கோடி மதிப்பில் மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில் முன்மொழியப்பட்ட ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு நேற்று(20.03.25) ஒப்புதல் அளித்துள்ளது.

சக்திவாய்ந்ததாக மாறும் ராணுவ டாங்கிகள்

அதன்படி, இந்திய ராணுவத்தில் உள்ள டி-90 பீஷ்மா டாங்கிகளுக்கு, தற்போதுள்ள 1000 ஹெச்பி என்ஜினை மேம்படுத்தும் வகையில் 1,350 ஹெச்பி என்ஜின் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, சக்திக்கும் எடைக்கும் இடையிலான விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், இந்த டாங்கிகள் போர்க்களத்தில் தனது இயக்கத்தை, குறிப்பாக உயரமான பகுதிகளில் மேம்படுத்தும்.

நவீனமயமாகும் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை

இந்திய கடற்படையை பொறுத்தவரை, வருணாஸ்திர நீர்மூழ்கி எறி குண்டு (டார்பிடோ) கொள்முதல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருணாஸ்திர டார்பிடோ என்பது, ஒரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலை தாக்குவதற்காக செலுத்தப்படும் எறி குண்டாகும். இதை, கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்கியுள்ளது. இந்த டார்பிடோவின் கூடுதல் அளவுகளை சேர்ப்பது, எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கடற்படையின் திறனை மேம்படுத்தும்.

இதேபோல், இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் வகையில், வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமான அமைப்புகளை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆயுத அமைப்பின் போர் திறனையும் அதிவேகமாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தில், 2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக கொண்டாடும் வகையில், மூலதனம் கையகப்படுத்தும் செயல்முறையின் பல்வேறு நிலைகளில் காலக்கெடுவை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களுக்கு, அதாவது தளவாடங்களை தாமதமின்றி வேகமாக கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

இதே நாளில், ரூ.7,000 கோடி மதிப்பில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட தோண்டப்பட்ட பீரங்கி துப்பாக்கி அமைப்பை (Advanced Towed Artillery Gun System – ATAGS) கொள்முதல் செய்ய, பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

Related Post

90 நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்

Posted by - July 29, 2023 0
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக…

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…
Generated Image January 17 2026 11 25AM

மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்

Posted by - January 17, 2026 0
 தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளதா.? என்பதை தற்போது பார்க்கலாம்.. ராக்கெட் வேகத்தில் தங்கம்…

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!

Posted by - March 26, 2025 0
டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு, அதிமுக- பாஜக கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். இபிஎஸ் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *