திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன்: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்

315 0

உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் கள்ளக்காதலன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.Two youths murdered in Kadapa over alleged old disputes, police start probe

அந்த பெண்ணிற்கு கடந்த 2015-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்தில் திருமண வாழ்க்கை கசக்க, இந்த ஜோடி பிரிந்தது. அந்த பெண் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது ஆதேஷ் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு பின் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் தனிமையில் சந்திக்க, அந்த பெண் கர்ப்பமானார். இதனால் ஆதேஷ் இடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், ஆதேஷ் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முயற்சி செய்தார். அந்த பெண்ணை தீர்த்துக்கட்ட நான்கு பேர் உதவியை நாடினார்.

அவர்களும் கொலை செய்ய ஒப்புக் கொண்டர். சம்பவம் நடைபெற்ற ஜூலை 2-ந்தேதி ஆதேஷ் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த பெண் ஆதேஷ் வீட்டிற்கு வந்ததும், தயாராக இருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்த்து செங்கலால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், உடலை வயல்வெளியில் வீசி, யாருக்கும் தெரியாததுபோன்று வீட்டில் இருந்துள்ளார். போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

Related Post

காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் – செல்போன் அழைப்புகள் மூலம் சிக்கினார்

Posted by - June 10, 2023 0
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..!

Posted by - February 6, 2026 0
 Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது. 25 ஆண்டுகளில்…

கல்பாக்கம் முதல் சென்னை வரை பிளான்.. மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை.

Posted by - February 29, 2024 0
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி…

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.…

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *