கல்பாக்கம் முதல் சென்னை வரை பிளான்.. மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை.

200 0

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வருகிறார். இதில், சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதில், தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிடும் வகையில் அரசியல் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பாஜகவை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியும் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார். முதல் நாள் பயணத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டாம் நாளில் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன், முடிவுற்ற பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வர உள்ளார். இதில், மார்ச் 4 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் மாலை 5.15 மணிக்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். மேலும், மார்ச் மாத மத்தியிலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் இந்த பயணத் திட்டம் இருக்கும் என்று தெரிகிறது.

இதனிடையே, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நாராயணன் திருப்பதி, லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் நாளை டெல்லி செல்ல உள்ளனர். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

Related Post

அட்ரஸ் கேட்டதால் தலைக்கேறிய கோபம்: டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய பெண்

Posted by - August 24, 2023 0
பார்சல் டெலிவரி செய்யும் நபர்கள், சில நேரங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் பெண் ஒருவர், டெலிவரி நிர்வாகியை கத்தியால்…

தமிழகத்திற்கு தண்ணிர் திறந்து விட முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி!

Posted by - July 13, 2024 0
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார்…

பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில் தகவல்

Posted by - June 10, 2023 0
பெங்களூரு : பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,…

கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி…உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா…?

Posted by - December 13, 2024 0
Reliance Industries Seeking Big Loan – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக…

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்

Posted by - September 15, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *