தேர்தல் வருதுல்ல… திட்டக்குடி பெண்களுக்கு அமைச்சரின் தீபாவளி கிஃப்ட்!

198 0

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார்.

கடந்த சில தினங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றியம் மாங்குளம், கீழ் ஒரத்தூர், ஆக்கனூர், பாளையம், கீழ்செருவாய், இடைச்செருவாய், கோடங்குடி, பட்டூர் என கிராமங்களைச் சுற்றி வரும் கணேசன், ஒரு கையில் பெண்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டு மறுகையில் அவர்களுக்கு புடவையை எடுத்து தீபாவளி கிஃப்ட்டாக தந்து வருகிறார்.

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார்.

கடந்த சில தினங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றியம் மாங்குளம், கீழ் ஒரத்தூர், ஆக்கனூர், பாளையம், கீழ்செருவாய், இடைச்செருவாய், கோடங்குடி, பட்டூர் என கிராமங்களைச் சுற்றி வரும் கணேசன், ஒரு கையில் பெண்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டு மறுகையில் அவர்களுக்கு புடவையை எடுத்து தீபாவளி கிஃப்ட்டாக தந்து வருகிறார்.சிரித்த முகத்துடன் புடவையை வாங்கிச் செல்லும் பெண்கள், “ஏய் உன்னோட புடவையைக் காட்டு… என்ன டிசைன்னு பார்க்கலாம்” என்று விசாரணைகளைப் போட, அமைச்சரைப் பின்தொடரும் ஆண்களோ, ‘நமக்கெல்லாம் ஒண்ணும் இல்லையா?’க்கும் என்பது போல் ஏக்கப் பார்வை பார்க்கிறார்கள்.திட்டக்குடியில் இருக்கும் ஜவுளிக்கடை முதலாளிகளோ, “ஏதோ, தீபாவளிக்குத்தான் கூடுதலா நாலு துணி மணி விற்கும் அதுக்கும் வேட்டு வைக்கிறாங்களா..?” என்று ஆதங்க அவலை மெல்கிறார்கள்.இதனிடையே, அமைச்சரின் புடவை கிஃப்ட் டெக்னிக் பெண்கள் மத்தியில் பேசப்படுவதைப் பார்த்துவிட்டு பக்கத்து தொகுதியான ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ.வானவசந்தம் கார்த்திகேயனும் புடவைப் பார்சலை தூக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் அமைச்சரை விட ஒருபடி மேலே போய், கோரிக்கை மனுக்களை வாங்க வருவதாக முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு வீடு வீடாகச் சென்று புடவை கிஃப்ட்களை வழங்கி வருகிறார்.

Related Post

“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

Posted by - November 6, 2025 0
“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி…

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…

விரக்தியில் விஜய்! கூவி கூவி அழைத்தும் கூட்டணிக்கு வராத கட்சிகள்.. மக்களே இனி துணை!

Posted by - July 31, 2025 0
நடிகர் விஜய் தன்னுடைய தவெக தலைமையிலான கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்தே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள்…

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…

விஜய் சொன்ன முக்கிய தகவல்..

Posted by - February 2, 2026 0
தவெக 3ஆம் ஆண்டையொட்டி விஜய் கூறுகையில், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *