நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

115 0

நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீசுக்கு கண்டனம் தெரிவித்தார். தங்களின் வாக்கு வங்கியை காப்பாற்றவே திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். வாக்கு வங்கிக்காகவே எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் அதில் கையொப்பம் இட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற முடியாமல் எதிர்க்கட்சியினர் தேர்தல் முறைகளை குறை சொல்வதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய அவர், விவாதத்திற்கு பயந்து ராகுல்காந்தியை போன்று ஓடக் கூடியவர்கள் யாரும் இல்லை என கிண்டலடித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாதென கூறுவதா? என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பதவி கொடுக்க கூடாதென அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, இந்திய நாட்டின் பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் காரர்தான் என்று கூறினார்.

மேலும் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைக்கும் போதெல்லாம் வெற்றி பெறுவது பாஜகதான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். பீகாரை போல், மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் இண்டி கூட்டணி தோல்வி அடையும் என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Post

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

திருப்பதிக்கு போறீங்களா? 99 சதவீதம் பேர் செய்யும் தவறு! பெருமாளே சொல்லியும் பாலோ செய்யாத பக்தர்கள்

Posted by - December 26, 2023 0
திருப்பதி: திருப்பதியில் 99 சதவீத பக்தர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.…

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கை இப்போதே விற்றுவிடுகள்… எச்சரிக்கும் நிபுணர்க்ள்…. காரணம் என்ன?

Posted by - August 14, 2024 0
சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒராண்டாகவே பெரும் ஏற்றத்தை அடைந்து வருகிறது. அதாவது இந்த பங்கின் விலை ஒரு வருடத்தில் 300 சதவிகிதம் வரை…

கனமழையால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டிய நீர்மட்டம்: கரையோர மக்கள் வெளியேற்றம்

Posted by - July 11, 2023 0
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *