“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

216 0

அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தன் பக்கம் இருப்பதால் சிலருக்கு வயிறு எரிவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்பாடு இன்றி பேசும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிப்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் நம் பக்கம், மாற்று முகாம் கலக்கம் என்ற தலைப்பில், கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், “நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்ற அக்கறை அதிகாரிகள் வரை இருப்பதால், மக்களின் தேவை அறிந்து நிறைவேற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.

பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகத்தை முன்பை விடச் சிறப்பாகத் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பண்பாடு இன்றி, அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப்பயணத்திலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதைப் பார்த்து சிலர் வயிறு எரிவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Post

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின்

Posted by - December 8, 2025 0
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கோயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். சீர்காழி அருகே திருவெண்காட்டில் இந்துசமய…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - December 28, 2022 0
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக…

சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்

Posted by - December 12, 2023 0
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

Posted by - May 3, 2023 0
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *