பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

206 0

விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது விழுப்புரம் திமுகவில் புயலை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் அந்த பேனர்களில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

சரிந்த பொன்முடி ராஜ்யம்:

முதலில் உயர்கல்வித்துறை..அடுத்தது மாவட்ட பொறுப்பு..அடுத்து துணை பொதுச்செயலாளர் பதவி..இறுதியாக அமைச்சர் பதவி என பொன்முடியின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்த நிலையில், விழுப்புரத்தின் ராஜாவாக இருந்த அவரது மதிப்பும் குறைய தொடங்கி அவர் டம்மி ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

விழுப்புரத்தின் முடிசூடா மன்னனாக இருந்து வந்த பொன்முடியின் பவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது அமைச்சர் பதவியோடு விழுப்புரமும் பொன்முடியின் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது விழுப்புரம் திமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் விழுப்புரம் மொத்தத்தையும் தனது கன்ட்ரோலில் வைத்திருந்த பொன்முடியின் பவரை பிடுங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டது திமுக தலைமை. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார் முன்னாள் எம்.பி.யும் பொன்முடியின் மகனுமான டாக்டர் கௌதம சிகாமணி.

மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன்

விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம், வானூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார். அங்கு தான் விழுப்புரம் கலைஞர் அறிவாலயமும் அமைந்துள்ளது. தான் பார்த்து பார்த்து கட்டிய அறிவாலயத்தில் லட்சுமணன் அமர்வதில் பொன்முடிக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை.

இதனையடுத்து லட்சுமணனை எதிர்க்கும் வகையில் பல உள்ளடி வேலைகளை பார்த்து வந்தார் பொன்முடி. ஆனால் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களால், தலைமையில் கடும் அதிருப்திக்கு ஆளாகி கட்சியில் இருந்தே ஒதுக்கப்பட்டார் பொன்முடி. இதைத்தொடர்ந்து லட்சுமணனின் கொடி விழுப்புரத்தில் உயரப் பறக்க தொடங்கியது. தனக்கென தனி கூட்டத்தை உருவாக்கி பொன்முடியின் இடத்தை பிடிக்க முட்டி மோதி வருகிறார் லட்சுமணன்.

தவிர்க்கப்பட்ட பொன்முடி:

இந்நிலையில் விழுப்புரம் மண்டல பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடி நியமிக்கப்படாமல் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த செயற்குழு கூட்டத்திற்கான போஸ்டர்கள் மற்றும் பேனர்களிலும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.

கலைஞர் அறிவாலயம் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரான லட்சுமண்னின் கண்ட்ரோலில் வரும் நிலையில், லட்சுமணன் வேண்டுமென்றே பொன்முடியை புறக்கணித்து வருவதாக விழுப்புரம் திமுகவினர் பேசி வருகின்றனர். மேலும் நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் அமைச்சர் எம் ஆர் கே தலைமையில் நடைபெற்றது. பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியின் ஏரியா என்பதால் அதில் பொன்முடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Post

மகளிர் உரிமை தொகை ரூ.1000 இன்னும் வரலியா?அப்ளை பண்ணிட்டீங்களா? மெசேஜ் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்

Posted by - September 23, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம்…

செல்போன் செயலியில் களம் இறங்கும் விஜய்.. 234 தொகுதிகளுக்கும் குறி… அரசியல் பிளான் என்ன?

Posted by - March 4, 2024 0
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்…

அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்..

Posted by - July 1, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து…

முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

Posted by - January 9, 2024 0
சென்னை: முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும். வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம்,…

கேதுவால் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்வந்த நிலையை அடையவுள்ள 3 ராசிகள்!

Posted by - December 7, 2024 0
2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *