பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

216 0

விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது விழுப்புரம் திமுகவில் புயலை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் அந்த பேனர்களில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

சரிந்த பொன்முடி ராஜ்யம்:

முதலில் உயர்கல்வித்துறை..அடுத்தது மாவட்ட பொறுப்பு..அடுத்து துணை பொதுச்செயலாளர் பதவி..இறுதியாக அமைச்சர் பதவி என பொன்முடியின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்த நிலையில், விழுப்புரத்தின் ராஜாவாக இருந்த அவரது மதிப்பும் குறைய தொடங்கி அவர் டம்மி ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

விழுப்புரத்தின் முடிசூடா மன்னனாக இருந்து வந்த பொன்முடியின் பவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது அமைச்சர் பதவியோடு விழுப்புரமும் பொன்முடியின் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது விழுப்புரம் திமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் விழுப்புரம் மொத்தத்தையும் தனது கன்ட்ரோலில் வைத்திருந்த பொன்முடியின் பவரை பிடுங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டது திமுக தலைமை. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார் முன்னாள் எம்.பி.யும் பொன்முடியின் மகனுமான டாக்டர் கௌதம சிகாமணி.

மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன்

விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம், வானூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார். அங்கு தான் விழுப்புரம் கலைஞர் அறிவாலயமும் அமைந்துள்ளது. தான் பார்த்து பார்த்து கட்டிய அறிவாலயத்தில் லட்சுமணன் அமர்வதில் பொன்முடிக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை.

இதனையடுத்து லட்சுமணனை எதிர்க்கும் வகையில் பல உள்ளடி வேலைகளை பார்த்து வந்தார் பொன்முடி. ஆனால் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களால், தலைமையில் கடும் அதிருப்திக்கு ஆளாகி கட்சியில் இருந்தே ஒதுக்கப்பட்டார் பொன்முடி. இதைத்தொடர்ந்து லட்சுமணனின் கொடி விழுப்புரத்தில் உயரப் பறக்க தொடங்கியது. தனக்கென தனி கூட்டத்தை உருவாக்கி பொன்முடியின் இடத்தை பிடிக்க முட்டி மோதி வருகிறார் லட்சுமணன்.

தவிர்க்கப்பட்ட பொன்முடி:

இந்நிலையில் விழுப்புரம் மண்டல பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடி நியமிக்கப்படாமல் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த செயற்குழு கூட்டத்திற்கான போஸ்டர்கள் மற்றும் பேனர்களிலும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.

கலைஞர் அறிவாலயம் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரான லட்சுமண்னின் கண்ட்ரோலில் வரும் நிலையில், லட்சுமணன் வேண்டுமென்றே பொன்முடியை புறக்கணித்து வருவதாக விழுப்புரம் திமுகவினர் பேசி வருகின்றனர். மேலும் நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் அமைச்சர் எம் ஆர் கே தலைமையில் நடைபெற்றது. பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியின் ஏரியா என்பதால் அதில் பொன்முடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Post

இடைநிலை ஆசிரியர்கள் கைது – கண்டனம் தெரிவித்த தினகரன்

Posted by - February 22, 2024 0
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள்…

அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!

Posted by - October 16, 2024 0
தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினர்.   தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27ம்தேதி மாலை…

“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

Posted by - April 10, 2024 0
ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ்…

கண்பார்வையை அதிகரிக்க கேரட் மட்டுமில்லை இந்த எளிய பொருட்களையும் சாப்பிடலாமாம்… ட்ரை பண்ணுங்க…!

Posted by - October 17, 2023 0
நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று கண்கள். நம் கண்களால் தான் நாம் இந்த உலகை ரசிக்க முடிகிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறையால் கண்…

இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

Posted by - June 2, 2025 0
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *