மக்களே எச்சரிக்கை..! அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்… இது கொரோனா வேரியன்டா?…

302 0

H3N2 influenza Virus | வேகமாகப் பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சில விஷயங்களை நினைவில் கொள்வது அவசியம். H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்றின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே.

H3N2 Influenza Symptoms : டெல்லி, சென்னை போன்ற பெரும் நகரங்களில் மர்ம காய்ச்சலின் தாக்க அதிகரித்துள்ளது. இது, H3N2 இன்ஃப்ளூயன்ஸா என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். H3N2 இன்ஃப்ளூயன்ஸா “ஹாங்காங் காய்ச்சல்” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும். இது சுவாச நோயை ஏற்படுத்துகிறது.

புது தில்லியில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா A வகை தொற்றுக்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர, கடுமையான குளிரிலிருந்து வெப்பத்திற்கு வானிலை மாறும் போதும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படலாம்.

H3N2 இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைத்தல், உடல் வலி, தலைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த பொதுவான அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகுவது நல்லது.

இதற்கு எப்படி சிகிச்சையளிப்பது?

H3N2 காய்ச்சல் ஏற்பட்டால், நன்றாக ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். அத்துடன், திரவ நிலையில் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல் மற்றும் உடல் வலியைக் குறைப்பதற்கு அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

 

H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள் கடுமையாக இருந்தால், ஒசெல்டமிவிர் மற்றும் ஜானமிவிர் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கடுமையான அதிகுறிகள் நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

H3N2 இன்ஃப்ளூயன்ஸாவில் இருந்து எப்படி உங்களை பாதுகாப்பது?

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றை தடுக்க, ஆண்டுதோறும் தவறாமல் காய்ச்சல் தடுப்பூசியை போட்டுக்கொள்வது, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை தவறாமல் கழுவுதல், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது, தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, மக்கள் கூட்டமான இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, வெளியில் செல்லும் பொது மாஸ்க் போடுவது, அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்ப்பது போன்ற சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

இது கொரோனா போன்று பரவக்கூடிய நோயா?

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வேகமாக மற்றவர்களுக்கு பரவும். H3N2 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் பேசும்போது, இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிமையாக பரவும். கொரோனாவை போல வைரஸால் மாசுபட்ட மேற்பரப்பைத் தொட்டபின்னர், கைகளை சுத்தம் செய்யாமல் ஒருவர் வாய் அல்லது மூக்கைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே இதயம், சர்க்கரை மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

Related Post

அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம்: தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார்…

சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சி நிகழ்ச்சியால் உடன்பிறப்புகள் உஷ்ணம்!

Posted by - January 13, 2024 0
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில்…

தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை (நவ.4) மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட்…

கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

Posted by - November 23, 2022 0
மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Posted by - June 19, 2024 0
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிவித்துள்ளார் . இதுகுறித்து த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *